மேலும் அறிய

Rajnath Singh: மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்: உறுதி அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூகம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை, இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தகவலை கேட்டறிந்தார்.

மத்திய அரசின் பிரதிநிதியாக தமிழ்நாடு வருகை தந்த ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்தபின், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். 

ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு: 

ஹெலிகாப்டன் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வான்வழிப் பயணம் மேற்கொண்டபோது, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றனர். 

அதன்பிறகு, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்தித்தார். தொடர்ந்து, மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. விளக்கக்காட்சிக்குப் பிறகு, அவர் டெல்லிக்கு புறப்படுகிறார். 

முன்னதாக, மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறு பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 5,060 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதியாக உடனடியாக வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியதை அடுத்த இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ராஜ்நாத் சிங்குடன் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னை மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வர தொடங்கி இருக்கிறார்கள். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வாலர்கள் அனைவரும் இணைந்து களப்பணி ஆற்றி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவிலான பொருட்செலவு, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சாலைகள், பொது கட்டிடங்கள் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்தவற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 5,060 கோடி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை கருத்தில்கொண்டு முதற்கட்டமாக இன்று 460 கோடி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.