மேலும் அறிய

Cyclone Montha: சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா.. காத்திருக்கு கனமழை - தமிழகத்தில் எங்கெல்லாம்?

மோன்தா புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.

Cyclone Montha Current Status: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருமவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த சூழலில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோன்தா புயலாக உருவாகியுள்ளது. மோன்தா புயல் இன்றுதான் உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலையே உருவானது. 

480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா:

மோன்தா புயல் உருவானது முதலே தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், ஆந்திரா, ஒடிசாவில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் தென்மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசை நோக்கி மோன்தா புயல் தற்போது 17 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 

தற்போது மோன்தா புயல் சென்னைக்கு கிழக்கில் 480 கி.மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிற்கு 530 கி.மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு 560 கி.மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் கோபால்புரில் இருந்து 720 கி.மீட்டர் தொலைவிலும் மற்றும் அந்தமானின் போர்ட் ப்ளேயரில் இருந்து 890 கி.மீட்டர் தொலைவிலும் தற்போது மோன்தா புயல் நிலை கொண்டுள்ளது.

110 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று:

இந்த மோன்தா புயல் நாளை கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகில் நாளை மோன்தா புயல் கரையை கடக்கும் என்று கருதப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் அபாயம் உள்ளது. இந்த சூறைக்காற்று 110 கி.மீட்டர் வேகத்தில் வீசும் அபாயமும் உள்ளது. 

எங்கெல்லாம் மழை?

இந்த மோன்தா புயல் காரணமாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை இன்று பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மோன்தா புயல் கரையை கடக்கும் நாளைய தினத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் அபாயம் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை ஓரிரு இடங்களில் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடலோரத்தில் அதிகரிக்கும் காற்றின் வேகம்:

இந்த மோன்தா புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் கடற்கரை பகுதிகளில் 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் இந்த காற்று 65 கி.மீட்டர் வரை வீசும் வாய்ப்பும் உள்ளது. 



Cyclone Montha: சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் மோன்தா.. காத்திருக்கு கனமழை - தமிழகத்தில் எங்கெல்லாம்?

இந்த மோன்தா புயல் காரணமாக ஆந்திராவிலே அதிக தாக்கம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அங்கு கடலோரங்களில் 60 முதல் 70 கி.மீட்டர் வரை சூறைக்காற்று வீசும். நாளை காலை முதல் 90 கி.மீட்டர் முதல் 100 கி.மீட்டர் வரை அங்கு புயல் காற்று வீச வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் இந்த சூறைக்காற்றின் வேகம் மெல்ல குறையும். 

இன்றும், நாளையும் எப்படி?

தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

புயல் கரையை கடக்கும் நாளைய தினத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மோன்தா புயல் காரணமாக தமிழ்நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Embed widget