மேலும் அறிய

Cuddalore Woman Suicide: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நடந்து கொண்ட வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ்

Cuddalore Woman Suicide: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நடந்து கொண்ட வங்கி அதிகாரிகளை கைது செய்யவேண்டும் என ராமதாஸ் டிவீட் செய்துள்ளார்.

Cuddalore Woman Suicide:: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நடந்து கொண்ட வங்கி அதிகாரிகளை கைது செய்யவேண்டும் என ராமதாஸ் டிவீட் செய்துள்ளார்.
 
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடனை கட்டாததற்காக ஈக்விடாஸ் தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம் அனுபவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயந்தி - செல்வராஜ் இணையர் வாங்கிய கடனுக்கு ஒரு மாத தவணை தான் செலுத்தவில்லை. அதற்காக நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஜெயந்தி வீட்டுக்குள் குண்டர்களுடன் நுழைந்த வங்கி அதிகாரிகள், இரவு 8 மணி வரை தங்கி அட்டகாசம் செய்ததுடன், அசிங்கமாக பேசி அவமானப்படுத்தியுள்ளனர். கடன் தவணையை செலுத்தாவிட்டால், அதை வசூலிக்க சட்டப்பூர்வமான நடைமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றாமல் குண்டர்களை வைத்து மிரட்டுவதும்,அவமதிப்பதும் குற்றம்; உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. இதற்கு காரணமான ஈக்விடாஸ் வங்கி அதிகாரிகளை கைது செய்யவேண்டும். தற்கொலை செய்து கொண்ட ஜெயந்தி குடும்பத்திற்கு தனியார் வங்கியிடமிருந்து ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்றுக் கொடுக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். 

 
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த அணுகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரின் மனைவி ஜெயந்தி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக தவணை தவறாமல் செலுத்தி வந்துள்ளார்.
 
இந்த நிலையில், இந்த மாதத்திற்கான கடன் தவணை செலுத்த பத்து நாட்கள் தாமதம் ஆகியதால் தனியார் நிதி நிறுவன கடன் வசூலிப்பவர்கள் வீட்டிற்கு வந்து தினமும் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து நேற்றைய தினம் வீட்டிலிருந்த ஜெயந்தியின் இளைய மகளிடம் தனியார் நிதி நிறுவன ஊழியர் தவனையை திருப்பி செலுத்தக் கோரி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மனம் உடைந்த சிறுமி, தாயார் ஜெயந்தியிடம் சென்று அழுதுள்ளார். பின்னர் சிறுமியை கோவிலுக்கு அனுப்பி விட்டு வீட்டிலிருந்த ஜெயந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 இதே நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய ஒரு நபரை கடந்த வாரம் வங்கி மேலாளர் தரகுறைவாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மஞ்ச குப்பத்தை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரை போனில் தொடர்பு கொண்டு, ஏன் கட்டவில்லை என்று கேட்டதற்கு, அவர் உடல்நிலை சரியில்லை என தெரிவித்தார். உடல்நிலை சரியில்லை என்றால் ’என்ன இதயத்தில் உனக்கு பெரிய ஓட்டையா பிச்சை எடுத்தாவது பணத்தைக் கட்டு’ என்று அவர் பேசியிருந்தார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கருணாமூர்த்தி கடலூர் காவல் கண்காணிப்பாளர்களும் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். இதற்கான விசாரணை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அதே வங்கி ஊழியர்கள் பெண்ணை அவமானப்படுத்தியதால் அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget