மேலும் அறிய

Crime: மதுபோதையில் 'வந்தே பாரத்' ரயில் மீது கல் வீசிய வாலிபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய நபர் கைது. ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து மைசூர் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் நேற்றி காலை 8:15 மணி அளவில் சென்னையில் இருந்து காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி வழியாக மைசூர் நோக்கி  சென்று கொண்டிருந்தது. அப்போது  வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியிற்கு ரயில் வந்தபோது திடீரென ரயில் உள்ள எஸ் 14 கோச் என்ற பெட்டியின்  கண்ணாடி உடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த  ரயில் பயணிகள் இதுகுறித்து ரயில் ஓட்டுநர் மற்றும் டிக்கெட் பரிசோதகரிடம் உடனடியாக  தகவல் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து தகவல் அறிந்த வந்தே பாரத் ரயில் ஓட்டுநர் உடனடியாக எஸ் 14 கோச்சை நேரடியாக சென்று சோதனை செய்து அங்கு இருந்தவர்களிடம் கண்ணாடி உடைப்பு குறித்து விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரயில் ஓட்டுநர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சென்று கண்ணாடி உடைப்பு  குறித்து ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

 


Crime: மதுபோதையில் 'வந்தே பாரத்' ரயில் மீது கல் வீசிய வாலிபர் கைது

 

இந்த புகாரை பெற்றுக்கொண்ட ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வந்தனர்‌. அதனைத்தொடர்ந்து வாணியம்பாடி புதூர்  அடுத்த  திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த குபேந்திரன் வயது (21) என்பவர் ரயில்வே தண்டவாளத்தில் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருப்பது தெரிய வந்தது. பின்னர் ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று  குபேந்திரனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் குபேந்திரன் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியது தெரியவந்துள்ளது. 

 


Crime: மதுபோதையில் 'வந்தே பாரத்' ரயில் மீது கல் வீசிய வாலிபர் கைது

அதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று  விசாரணை மேற்கொண்டதில் அவர்  மதுபோதையில் வந்தே பாரத் ரயில் மீது கல்லை வீசியது ஒப்புக்கொண்டு உள்ளார். குபேந்திரனை கைது செய்த ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குபேந்திரன் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வந்தே பாரத் ரயிலின் மீது கல்வீசிய சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget