மேலும் அறிய

பாசன வாய்க்காலில் பஸ் நிலையமா..? - கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

கரூரில் பாசன வாய்க்காலை தடுத்து அரசின் இடம் அனுமதி பெறாமல் பஸ் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கரூர் மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாய் அபராதம்.

கரூரில் பாசன வாய்க்காலை தடுத்து அரசின் இடம் அனுமதி பெறாமல் பஸ் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக கரூர் மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைய மேலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

 

 

 


பாசன வாய்க்காலில் பஸ் நிலையமா..? -  கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

 

கரூர் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பேருந்து நிலையம் தேவை என உணர்ந்து தேர்தல் வாக்குறுதிகளில் அதிமுக, திமுக என தவறாமல் புதிய பேருந்து நிலையம் அமையும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். அப்படி கடந்த 30 ஆண்டுகளாக மாறி மாறி பேருந்து நிலையம் இதோ வந்துவிடும் அதோ வந்துவிடும் என நினைத்து ஏங்கி இருந்த மாவட்ட மக்களுக்கு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோடங்கிபட்டி என்ற இடத்தில் பேருந்து அமையும் அதற்கான பூமி பூஜையை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தொடங்கி வைத்தார். பணிகள் துவங்குவதற்குள் தேர்தல் வந்துவிட்டது. ஆகவே அந்த புதிய பேருந்து நிலைய பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேர்தல் நேரத்திலும் திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் கரூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அமையும் என வாக்குறுதி அளித்தனர். இது சம்பந்தமாக பேருந்து நிலையத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் வேட்பாளர் பிரச்சார பிரச்சாரத்திலும் முன்னாள் முதலமைச்சர்களும் இந்நாள் முதலமைச்சரும் வாக்குறுதியை வாரி வீசினர்.

 


பாசன வாய்க்காலில் பஸ் நிலையமா..? -  கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

 

அதன்படி, தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தது. அப்போது மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியது. 48 வார்டுகள் கொண்ட மாநகராட்சியை அதிக எண்ணிக்கையில் திமுக கைப்பற்றியதால் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் பேருந்து நிலையம் அமையும் என அனைவரும் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜியின் முயற்சியால் புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூர் உருவாக்கப்படும் எனவும் அந்த பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு கருணாநிதி பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன்படி பூமி பூஜை பணிகளும் நடைபெற்று இன்றுவரை பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் கரூர் மாவட்டம் திருமாநிலையூர் கிராமத்தில் பாசன வாய்க்கால் மற்றும் விலை நிலங்களை தடுத்து கரூர் மாநகராட்சி பஸ் நிலையம் கட்டி வருகிறது. அதை தடுக்க உத்தரவிட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் ராஜ் என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா நாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பில் கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் மாநில அரசிடம் அனுமதி பெறாமல் நீர் வழித்தடங்கள் விலை நிலங்களை சீரமைத்து கரூர் மாநகராட்சி பஸ் நிலையம் கட்டி வருவது கூட்டுக்குழு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. உரிய அனுமதியின்றி விலை நிலங்களில் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதால் ஏற்படும் சேதங்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட வேண்டும் மாநில அரசிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என்பது தெரிந்தும் ஒப்புதல் பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கி உள்ளனர். இந்த அபராத தொகையை இரண்டு மாதங்களுக்குள் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் செலுத்த வேண்டும்.

 


பாசன வாய்க்காலில் பஸ் நிலையமா..? -  கரூர் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம்

 

அபராத தொகையை பசுமை பரப்பை அதிகப்படுத்தவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டும். அரசியலிலிருந்து தேவையான ஒப்புதல் பெறப்படும் வரை பஸ் நிலைய கட்டுமான பணிகள்  நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கோடங்கிபட்டிகளும் திமுக ஆட்சி காலத்தில் திருமாநிலையூரிலும் பேருந்து நிலையம் வந்துவிடும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கும் பேருந்து நிலையம் இங்கேதான் வருகிறது. எதிர்பார்த்த பொதுமக்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

பேருந்து நிலையம் அமையும் இடத்தில் இது போன்ற குளறுபடிகள் இருக்கும் பட்சத்தில் ஏன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தங்களது பணியை மெத்தனமாக செயல்படுகிறார்கள் என சில சமூக ஆர்வலர்களும் மன வேதனை உடன் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget