மேலும் அறிய

TN Corona: கோவையில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்; வாகனங்களில் வெளியில் காத்திருக்கும் நோயாளிகள்

லேசான கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களை கொடிசியா உள்ளிட்ட சிகிச்சை மையங்களுக்கு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் இன்று 3 ஆயிரத்து124 பேருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1இலட்சத்து 12 ஆயிரத்து 155 பேராக அதிகரித்துள்ளது. 94 ஆயிரத்து 444 பேர் குணமடைந்துள்ள நிலையில், 16 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதித்த 20 பேர் இன்று உயிரிழந்தால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 857 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள், 8 தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், 66 தனியார் மருத்துவமனைகள், 11 தனியார் சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இஎஸ்ஐ மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று மாலை நிலவரப்படி 530 சாதாரண படுக்கைகளில் 353 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 177 காலியிடங்கள் உள்ளன. அதேசமயம் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 286 படுக்கைகளில் 276 படுக்கைகள் நிரம்பியுள்ளன. பத்து படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 14 படுக்கைகளும் நிரம்பியுள்ளன.

இஎஸ்ஐ மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள்

இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று மாலை அதிகளவிலான கொரோனா நோயாளிகள் குவிந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக 200 க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் வந்தனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிலர் ஆம்புலன்ஸ் வாகனங்களிலும், கார்களிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்வதறியாது தவித்தனர். பின்னர் கொரோனா நோயாளிகளின் சிடி ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்து, தொற்றின் தன்மையை பொறுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லேசான கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களை கொடிசியா உள்ளிட்ட சிகிச்சை மையங்களுக்கு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர். வாகன வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.

இஎஸ்ஐ மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள்

இதுகுறித்து இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரவீந்தரனிடம் கேட்ட போது, “ஆம்புலன்சில் இரண்டு, மூன்று பேர் தான் காத்திருந்தனர். 200 பேர் கார்களில் காத்திருந்தனர். எதற்காக நிற்கின்றனர் என்றே எனக்கு தெரியவில்லை. கொரோனா தொற்று பாதித்தவர்கள் எங்கு சிகிச்சைக்காக செல்வது என்பது தெரியாமல் இம்மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு என்றாலே கோவை மக்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை தான் நினைவிற்கு வருகிறது. இம்மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். நோயாளிகளின் கொரோனா தொற்று தன்மையை பொறுத்தும், படுக்கைகளின் இருப்பை பொறுத்தும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறி இல்லாமல் தொற்றுக்குள்ளானவர்களையும், லேசான தொற்று பாதிப்பு இருப்பவர்களையும் கொடிசியா உள்ளிட்ட சிகிச்சை மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
Embed widget