மேலும் அறிய

மக்கள் கையில் தான் ஊரடங்கு; முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மக்களின் கையில்தான் உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க,ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசியிருப்பதாவது,  

“அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பாதுகாப்பாக உள்ளீர்களா? கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்துதான் இன்னொருவரிடம் பரவுகிறது, அதனால், தொற்று தங்கள் மேல் பரவாமல் இருப்பதற்கு தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். அதுபோல, நீங்களும் மற்றவருக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் கொரோனா சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை தடுத்திட முடியும். கடந்த 24-ந் தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ந் தேதி முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

சென்னையில் 7 ஆயிரத்தை எட்டிய கொரோனா பாதிப்பு தற்போது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் முழுமையாக குறைந்துவிடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் இந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. எனவே, கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.


மக்கள் கையில் தான் ஊரடங்கு; முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை உணர்ந்து அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. மக்களை நோக்கி காய்கறிகள், மளிகை பொருட்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுளளது. பொதுமக்களுக்கு தேவையான 13 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருட்கள் தொகுப்பு தரப்பட உள்ளது. இதை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முழு ஊரடங்கு காரணமாக குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மையே. இதனால்தான் கொரோனா நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவிலே அடுத்த கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்போகிறோம். இதை பொருளாதார நிபுணர் அபிஜித்பானர்ஜிகூட பாராட்டியுள்ளார். இருந்தாலும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  அது மக்களின் கையில்தான் உள்ளது.

கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்தால்தான் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகளை கடந்த மூன்று வாரமாக தமிழக அரசு செய்து கொண்டு வருகிறது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் தட்டுப்பாடு என்ற நிலை தற்போது இல்லை. ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற சூழல் இல்லவே இல்லை.


மக்கள் கையில் தான் ஊரடங்கு; முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

நிறைய மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது என்பதுதான் உண்மை. ஒரே நாளில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடுகிறோம். இந்த அளவிற்கு வேறு எந்த மாநிலத்திலும் தடுப்பூசிகள் போடப்படவில்லை. ஒரு நாளில் 1 லட்சத்த 72 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்கிறோம். இந்தளவிற்கு பரிசோதனை வேறு எந்த மாநிலத்திலும் செய்யப்படவில்லை.

மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நானே ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். கோவை இ.எஸ்.ஐ. கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பி.பி.இ. கிட் உடை அணிந்து நேரில் சென்று நலம் விசாரித்தேன். மருத்துவர்களோடு சேர்ந்து மற்றவர்களுக்கு ஊட்டுகிற நம்பிக்கையும், ஆறுதலும் நோயை குணப்படுத்தும்னு சொல்வார்கள்.

தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும் அரசாக செயல்படும். கொரோனா வார்டுக்குள் போகவேண்டாம்னு அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தான் உயிரையும் பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே நான் உள்ளே போனேன்.


மக்கள் கையில் தான் ஊரடங்கு; முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

உங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் உள்ளே போனீர்களே என்று பாராட்டுக்கள் ஒருபுறம், முதலமைச்சரே உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளனும்னு உரிமையோடு பலர் கண்டிக்கவும் செய்தார்கள். தமிழக மக்களை காப்பாற்றவே என்னை நானே ஒப்படைத்துக் கொண்டுள்ளேன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை பார்க்க நான் சென்றதால் பதற்றம் அடைந்த மக்களுக்கு நான் சொல்வது, இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வர வேண்டும். இந்த தொற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதனால், அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலர் மீறினாலும், அதனால் முழு பயனும் கிடைக்காமல் போய்விடும்.

முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான், இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இந்த இரண்டாவது அலை தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்புக்கும் நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது இதில் இருந்து விரைவில் நாம் மீள வேண்டும்.

மேலும் படிக்க : Delhi on corona : டெல்லியில் 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

தி.மு.க. தலைமையிலான புதிய அரசு அமைந்து மூன்று வாரங்கள்தான் ஆகியுள்ளது. எத்தனையோ புதிய திட்டமிடுதல்கள், பல்வேறு துறைகளில் செய்யப்பட வேன்டியுள்ளது. அதற்கு தடையாக உள்ள இந்த கொரோனா தடுப்புச்சுவரை நாம் விரைவில் உடைத்து நொறுக்க வேண்டும். அதன்பிறகுதான் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள், முன்னெடுப்புகள் செய்து வளமான தமிழகத்தை நாம் உருவாக்க முடியும். நிகழ்கால சோகங்களில் இருந்து மீண்டு, எதிர்கால புத்துணர்வை அனைவரும் பெற வேண்டும். கொரோனா தொற்றை வெல்வோம். வளமான தமிழகத்தை அமைப்போம்” இவ்வாறு அவர் பேசினார். டால

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக அமைச்சர்கள் ஜோக்கர்கள்... முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடும் விமர்சனம்!
தவெக அமைச்சர்கள் ஜோக்கர்கள்... முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடும் விமர்சனம்!
Ration Shop : நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
EPS ADMK : உண்மை தொண்டனை இழந்துவிட்டேனே.! கண்ணீர் விட்டு கதறிய இபிஎஸ்- சோகத்தில் அதிமுக
உண்மை தொண்டனை இழந்துவிட்டேனே.! கண்ணீர் விட்டு கதறிய இபிஎஸ்- சோகத்தில் அதிமுக
Udumalpet Power Cut (02-06-2026): உடுமலைப்பேட்டையில் நாளை எங்கெல்லாம் மின்தடை? இதோ அதிகாரப்பூர்வ லிஸ்ட்
உடுமலைப்பேட்டையில் நாளை எங்கெல்லாம் மின்தடை? இதோ அதிகாரப்பூர்வ லிஸ்ட்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
Ration Shop : நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
Embed widget