மேலும் அறிய

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து; ரூ. 25 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் வாங்க ரூபாய் 25 கோடி ஒதுக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தினசரி 37 ஆயிரம் என்று தினசரி பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா தினசரி பாதிப்பு தற்போது 20 ஆயிரம் என்ற நிலையில் பதிவாகி வருகிறது.

இந்த சூழலில், கொரோனா பாதிப்பால் மக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள நிலையில் கடந்த மாதம் முதல் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு மக்களை மேலும் அச்சப்படுத்தி வருகிறது. இந்த நோய் ஏற்கனவே உள்ள வியாதிதான் என்றாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களும், சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களும் அதிக அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து; ரூ. 25 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ராஜஸ்தான், குஜராத் ஆகிய வட மாநிலங்களில் இந்த வியாதியால் பலரும் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.  இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க ஆம்போடெரிக்சின் பி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இவற்றின் இருப்பு குறைவாக இருப்பதால், இந்த மருந்துகளை 30 ஆயிரம் குப்பிகள் அளவுக்கு தமிழ்நாட்டிற்கு உடனே ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது வரை கருப்பு பூஞ்சை நோயால் 938 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 35 ஆயிரம் குப்பிகள் மருந்துகள் தேவைப்படுகிற நிலையில் மத்திய அரசு இதுவரை 3 ஆயிரத்து 840 குப்பிகள் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியுள்ளார்.


கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து; ரூ. 25 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நிதி ஒதுக்கியுள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில், கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் ஆம்போடெரிக்சின் பி மருந்துகளை வாங்குவதற்கு ரூபாய் 25 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த நிதி கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதல், ஆக்சிஜன் தயாரிப்பு, படுக்கை வசதிகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இதுவரை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 280 கோடியே 26 லட்சம் நிவாரணமாக வந்துள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : 30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!

தலைப்பு செய்திகள்

இனி கடன் சுமை குறையுமா? 6 பேர் கொண்ட குழுவை உருவாக்கிய முதலமைச்சர் விஜய் - யார் அவர்கள்?
இனி கடன் சுமை குறையுமா? 6 பேர் கொண்ட குழுவை உருவாக்கிய முதலமைச்சர் விஜய் - யார் அவர்கள்?
கீழே தயங்கி நின்ற அனிதா ராதாகிருஷ்ணன்! மேலே வரச் சொன்ன அமைச்சர் வன்னி அரசு - நீங்களே பாருங்க
கீழே தயங்கி நின்ற அனிதா ராதாகிருஷ்ணன்! மேலே வரச் சொன்ன அமைச்சர் வன்னி அரசு - நீங்களே பாருங்க
வரும் 31ம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் காலவரையற்ற வேலைநிறுத்தம்: கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
வரும் 31ம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரியில் காலவரையற்ற வேலைநிறுத்தம்: கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
புதுச்சேரி அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்: 30 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
புதுச்சேரி அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்: 30 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Maruti Brezza New Features: அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Embed widget