மேலும் அறிய

சீர்காழியில் மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்; திருப்தியாக உள்ளதாக பேட்டி

அதீத மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த நவம்பர் 11-ஆம் தேதி தமிழகத்திலேயே அதிகப்படியாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழையானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பதிவானது. இதனால் சீர்காழி நகர் மட்டுமின்றி சீர்காழி தாலுக்கா முழுவதும் தண்ணீரில் மூழ்கி தற்போது வரை தத்தளித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளிலும் மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 


சீர்காழியில் மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்;  திருப்தியாக உள்ளதாக பேட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,67,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பா, தாளடி பயிர்களில் 87,500 ஏக்கர் நிலப்பரப்பு மழை நீரால் சூழப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பான 30 ஆயிரம் ஏக்கரில் 25 ஆயிரம் ஏக்கர்  மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரம் உமையாள்பதி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.


சீர்காழியில் மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்;  திருப்தியாக உள்ளதாக பேட்டி

முன்னதாக பச்சை பெருமாள் நல்லூர் அரசு பள்ளியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை சந்தித்த முதல்வர், அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, உமையாள்பதி ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு சொந்த பகுதியை பார்வையிட்டார். பின்னர் உமையாள்பதியில் வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த நிவாரணம் வழங்கும் மேடைக்கு வருகை புரிந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.


சீர்காழியில் மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்;  திருப்தியாக உள்ளதாக பேட்டி

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் அனைவரும் திருப்தியாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயை மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அமைச்சர்கள் மெய்யநாதன், செந்தில் பாலாஜி, ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் என பலரையும் இப்பகுதிக்கு அனுப்பி நிவாரண பணிகளை மேற்கொள்ள சொன்னேன். அவர்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். 


சீர்காழியில் மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்;  திருப்தியாக உள்ளதாக பேட்டி

இருந்த போதிலும், இது போதாதென நானும் நேரடியாக வந்து ஆய்வு செய்துள்ளேன். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஒரு சில குறைபாடுகள் உள்ளது அது இன்னும் ஐந்து ஆறு தினங்களுக்குள் சரி செய்யப்படும். நிவாரணம் வழங்குவது குறித்து ஒவ்வொரு வரும் ஒவ்வொன்று கூறுவார்கள், அதையெல்லாம் நாம் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. கணக்கெடுப்பு பணிகள் முழுமை அடைந்தவுடன் நிவாரண குறித்து அறிவிக்கப்படும். எதிர் கட்சிகள் அரசியல் செய்வதற்காக ஆயிரம் கூறுவார்கள், முழுமையான கணக்கெடுப்பு பிறகு நிவாரண தொகை அறிவிக்கப்படும்” என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், ஏ.வ.வேலு, மெய்யநாதன், ரகுபதி, செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget