மேலும் அறிய

ஏம்மா..உன்னத்தான் வர்ரியா? மப்டியில் நின்ற பெண் போலீசாரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞர்!

சென்னையில் பெண் போலீசாரிடம் பாலியல் ரீதியாக சைகை காட்டி அழைத்த நபரை போலீசார் கைது செய்தனர்

சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலு பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிலி.  காவலரான இவர், தாம்பரம் கானத்தூர் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை மத்திய கைலாஸ் பகுதி அருகேயுள்ள தனியார் மருத்துவமனை வாசலில் நின்றுள்ளார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரவிக்குமார் தாய்..

தாம்பரம் உதவி கமிஷ்னர் ரவிக்குமாரின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மத்திய கைலாஷ் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் பார்த்துக்கொள்ள வேண்டி வாய்மொழி உத்தரவின் பேரில் ஷர்மிலா பணியாற்றியுள்ளார். பின்னர் தனது ஷிப்ட்டை முடித்துவிட்டு மப்டி உடையில் அடுத்த ஷிப்ட் வேலைக்கு ஆயுதப்படை காவலர் சரவணனுக்காக  நேற்று இரவு மருத்துவமனை வாசலில் காத்துக்கொண்டு நின்றுள்ளார ஷர்மிளா.

அவரைக் கண்ட இளைஞர் ஒருவர் ‘ஏம்மா..வரியா.. உன்னைத்தான்’’ என அழைத்துள்ளார். எதிர்பாராத நபரின் எதிப்பாராத அணுகுமுறையால் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார் ஷர்மிளா. மீண்டும் வாசலுக்கு வந்துள்ளார். அங்கே இருந்த அதே நபர் மீண்டும் மீண்டும் ‘வரியா.. வரியா என ஆபாசமாக பேசியுள்ளார். தொடர் தொல்லையால் பொறுமையிழந்த காவலர், யாரிடம் எப்படி பேசுவதென தெரியாதா? எல்லாரிடமும் இப்படித்தான் பேசுவியா என கோபமடைந்துள்ளார். சரியாக அந்த நேரத்தில் அடுத்த ஷுப்டுக்கான காவலர் வரவே இந்த விவகாரம் பூதாகரமானது.


ஏம்மா..உன்னத்தான் வர்ரியா? மப்டியில் நின்ற பெண் போலீசாரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞர்!

மன்னிப்பு..

என்ன நடந்தது என கேட்டு தெரிந்துகொண்ட காவலர்  சரவணன் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் சைகை மூலம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதற்கு  மன்னிப்பு கேட்குப்படி கூறியுள்ளார். அதற்கும் விடாப்பிடியாக மறுப்பு தெரிவித்த அந்த இளைஞர் நான் அப்படித்தான் அழைப்பேன் எனக் கூறி தன் நண்பர்களுக்கும் போன் செய்துள்ளார். அங்கு வந்த இருவரும், அந்த இளைஞரும் சேர்ந்து காவலரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் பொறுமை இழந்த காவலர் அந்த இளைஞர் வந்த பைக் சாவியையும், செல்போனையும் பிடிங்கி மத்திய கைலாஷ் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.  பின்னர் இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கலிக்குன்றத்தை சேர்ந்த விக்னேஷ் (29) என்ற நபரிடம் விசாரணை செய்தனர். குற்றத்தை விக்னேஷ் ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது  பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நண்பர் குணசேகரனும் கைது செய்யப்பட்டார். பெண் போலீசாருக்கே பாலியல் தொல்லைக் கொடுக்கும் விதமாக சைகை காட்டிய சம்பவம் மத்திய கைலாஷ் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget