மேலும் அறிய

எலி மருந்தால் உயிரிழந்த குழந்தைகள்.. 5 நாட்கள் ஆகியும் நடக்காத பிரேத பரிசோதனை.. பின்னணி என்ன ?

Chennai Rat Kundrathur: சென்னை குன்றத்தூரில் எலி மருந்து நெடியால், உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை குன்றத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரிதரன் (34). இவர் தனியார் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் எலி தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் மூலம் வீட்டில் மருந்து வைத்ததாக கூறப்படுகிறது. பின்பு இரவு மனைவி பவித்ரா (31 ) ஆறு வயது மகள் வைஷ்ணவி, ஒரு வயது மகன் சாய் சுதர்சன் ஆகியோர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் வீட்டில் படுக்கையறையில் ஏசி போட்டு தூங்கி உள்ளனர். 

குடும்பத்தினரை பாதித்த நெடி

இதையடுத்து காலையில் அனைவருக்கும் மூச்சுத் திணறலுடன் வயிற்றுப்போக்கு ஆகி உள்ளது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் வீட்டில் இருந்த கிரிதரன், பவித்ரா இரண்டு குழந்தைகளையும் குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் ஆறு வயது சிறுமி வைஷ்ணவி ஒரு வயது சிறுவன் சாய் சுதர்சன் ஆகியோர் உயிரிழந்தனர். இதை அடுத்து கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பவித்ராவுக்கு நினைவு திரும்பியுள்ளது

குன்றத்தூர் போலீசார் விசாரணை 

அவரிடம் காவல்துறை நடத்தி விசாரணையில் வீட்டில் எலி மற்றும் பூச்சி தொல்லை இருந்ததால் ஆன்லைன் மூலம் தி நகரில் உள்ள தனியார் பெஸ்ட் கன்ட்ரோலை அழைத்ததாகவும் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் மூலம் வந்த நபர் ஒருவர் வீட்டில் கதவு ஜன்னல் உள்ளிட்டவற்றில் பேஸ்ட் போன்ற மருந்து வைத்ததாகவும் எலிக்கு வீட்டை சுற்றி டேப்லெட் வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், எலி மருந்தானது வீடு முழுவதும் காற்றில் பரவியதாலும், அதனை சுவாசித்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நல குறைவு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது என்றும், உடனடியாக எலி மருந்து வைத்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி, ஊழியர் என 3 பேர் மீது குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கு சீல்

இத்தகைய சூழ்நிலையில், இரண்டு குழந்தைகள் இறந்து போனது குறித்து பெற்றோருக்கு இன்னும் தெரிவிக்காததால், இறந்து போன இரண்டு குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இதில் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனத்தின் ஊழியர்கள் தினகரன் மற்றும் சங்கர் தாஸ் ஆகிய இரண்டு பேரையும் குன்றத்தூர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், உரிமையாளர் பிரேம்குமார் தலைமறைவானதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை தாமதம் ஏன் ?

இந்தநிலையில் உயிரிழந்த குழந்தைகளின் உடல் தாம்பரம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது சிக்கலான வழக்கு என்பதால் குழந்தைகள் எலி மருந்தின் நொடி காரணமாகத்தான், உயிரிழந்தது என்பதை உறுதி படுத்துவதற்காக தடயவியல் மருத்துவர் முன்னணியில் பிரேத பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் தாய் மற்றும் தந்தை உடல்நிலை இன்னும் இரண்டு நாட்களில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோரின் உதவியுடன் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Embed widget