Chess Olympiad :"செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ளும் ராஜா, ராணிகளே வருக".. முதலமைச்சர் முக ஸ்டாலின்!
இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![Chess Olympiad : Chennai Chief Minister Mk Stalin has posted on his Twitter page that he is happy to host the Chess Olympiad Chess Olympiad :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/16/77735d1a138b69b0e893f7effed4d30a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி - 2022 சர்வதேச செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 ம் தேதி நடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில், இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் எனவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது! தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்! உலகெங்கிலும் உள்ள அனைத்து ராஜாக்கள், ராணிகளையும் சென்னை அன்புடன் வரவேற்கிறது! என்று பதிவிட்டுள்ளார்.
Delighted that the Chess Capital of India is set to host the 44th Chess Olympiad! A proud moment for Tamil Nadu! Chennai warmly welcomes all the Kings and Queens from around the world!#ChessOlympiad2022
— M.K.Stalin (@mkstalin) March 15, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)