மேலும் அறிய

Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை விமானப்படை சாகச நிகழ்வை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகசத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தயார் நிலையில் இருந்தோம்:

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என ஏராளமான மருத்துவமனைகளில் 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் கேட்டது 100 படுக்கைகள். 65 மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

விமானப்படை சாகசம்:

15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள். வெயில் தாக்கம் என்பது பகல் 11 மணி வரை மதியம் 1 மணி வரை நடைபெற்றது. வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது.  விமான சாகசத்தை காண வரும் பொதுமக்கள் குடைகளுடன் வர வேண்டும். தண்ணீருடன் வர வேண்டும். கண்ணாடி அணிந்து வர வேண்டும். தொப்பி அணிந்து வர வேண்டும் என்று கூறியிருந்தனர். நீங்கள் அனைவரும் வாருங்கள். வெயில் இருக்காது. காய்ந்து போன வானமாக இருக்காது என்று யாரையும் கூப்பிடவில்லை. அவர்கள் கூப்பிடும்போது இதை அனைத்தையும் இந்திய விமானப்படை தெளிவாக கூறினார்கள்.

வருத்தத்திற்கு இறப்பு:

 இந்த சாகச நிகழ்வானது உலகத்திற்கு இந்தியாவின் விமான கட்டமைப்பை தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும். தஞ்சையில் இருந்து ஒரு விமானம் ரஃபேல் என்று நினைக்கிறேன் 20 நிமிடத்தில் வந்தது. இத்தகைய ஆற்றல் உள்ள விமான சேவை இந்தியாவில் இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டும் நிகழ்ச்சி இது. உண்மையில் இந்த இறப்பு வருத்தத்திற்குரிய ஒன்றுதான். யாரும் எதிர்பார்த்து நடக்கவில்லை.

அனைவரும் வருந்துகிறோம். அனைவரும் அனுதாபம் தெரிவிக்கிறோம். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தோற்றுவிடுவார்கள். 5 பேருடைய இறப்பு வருத்தத்திற்குரியது. இது வெயில் தாக்க மரணம். இவர்கள் 5 பேரும் மருத்துவமனைக்கு இறந்த நிலையிலே கொண்டு வரப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பலனின்றி யாரும் இறக்கவில்லை.

மருத்துவமனையில் உள்ளவர்கள் உடல்நிலை:

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்டவர்கள் 43 பேர். அவர்களில் புறநோயாளிகள் 40 பேர். ஒருவர் உயிரிழந்துவிட்டார். இரண்டு பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஓமந்தூரரார் மருத்துவமனையில் 49 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 46 பேர் புறநோயாளிகள். ஒருவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். புறநோயாளிகள் நேற்று இரவே வீடு திரும்பிவிட்டனர். அதில் இருந்தவர்களில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்கள் 2 பேர். புறநோயாளிகள் 7 பேர். உள்நோயாளியாக ஒருவர் உள்ளார். 2 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் கூட அனுமதிக்கப்படவில்லை. வெயில் தாக்கத்திற்கு ஆளாகியவர் எண்ணிக்கை 103. மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்கள் 7 பேர். 7 பேரும் நல்ல நிலையிலே உள்ளனர்.

அரசாங்கம் இறப்பே இல்லை என்று செய்தியை பரப்ப வேண்டாம். 15 லட்சம் பேரும் குறிப்பிட்ட சதுர அடியின் கீழ் வந்துவிட முடியாது. எங்கெல்லாம் வான் எல்லை தெரியுமோ அங்கிருந்து பார்த்துள்ளனர்."

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Embed widget