மேலும் அறிய

முருகன் உள்பட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை - மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் சாந்தன், ராப்ர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல்.

முருகன் உள்பட 4 பேரை (முருகன் சாந்தன், ராப்ர்ட் பயஸ், ஜெயக்குமார். ) மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் சாந்தன், ராப்ர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படாமல் இந்தியாவிலே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், 4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு இலங்கை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

நளினி - முருகன் விடுதலை 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டவை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் கடந்தாண்டு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோடி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

விடுதலையான 6 பேரில், நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாந்தன் இலங்கை பாஸ்போர்ட் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் பாஸ்போர்ட் உண்டு. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் அகதிகளாக பதிவுசெய்துகொண்டார்கள். அப்படியிருக்க, நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, நளினி சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். லண்டனில் வசிக்கும் இவர்களது மகளுடன் சேர்ந்து வாழ முருகன் விரும்பவதாகவும் பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூததரகத்தை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதாகவும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அகதிகள் முகாமில் உள்ள அவரால் அங்கிருந்து வெளி வர முடியவில்லை எனவும்,  திருவான்மியூரில் வசிக்கும் தன்னுடன் சேர்ந்து வாழ வகை செய்யும் வகையில் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என  உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசின் அயல்நாட்டினர் பதிவு மண்டல அலுவலக அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், கள்ளத் தோணி மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நான்கு பேரும், தற்போது அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதகரத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் நான்கு பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என மத்திய அரசு சார்பில் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வாசிக்க..

Sanatana Dharma: சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட விரும்பும் I.N.D.I.A கூட்டணி... பிரதமர் மோடி குற்றச்சாட்டு

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget