மேலும் அறிய

காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக ஜல்ஜீவன் திட்டம் பணிகள் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டது.

கரூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி போராட்டம் செய்தனர். தற்காலிகமாக இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

 


காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஜல் ஜீவன் மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் மற்றும் 3728 கிராமங்கள் குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டம் ரூபாய் 4187.84 கோடி மதிப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 14.12.2022 ஆம் தேதி அன்று ஒப்புதல் வழங்கப்பட்டு, தற்பொழுது கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 


காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

இந்தப் பணிகள் நடைபெறுவதால் வேலாயுதம்பாளையம், புஞ்சை புகலூர்,காகிதபுரம், திருக்காடுதுறை, பாலதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வசிக்கும் கிராமத்திற்கு குடிநீர் பிரச்சனை ஏற்படுவது காரணமாக இந்த ஜல்ஜீவன் திட்டத்தை எங்கள் பகுதியில் தடை செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காயித ஆலை நிறுவனத்தால் ஏற்கனவே மூன்று பிளான்ட்கள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஜல்ஜீவன் கூட்டுக் குடிநீர் திட்டமும் அமைக்கப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும்.

 



காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

தவிட்டுப்பாளையத்தைச் சார்ந்த 12 சமூக ஆர்வலர்கள் இதுதொடர்பாக எந்த பிரச்சனையும் எழுப்பக் கூடாது. எனவும் எதிர்காலத்தில் பொது அமைதியை சீர்குளிக்கும் செயலை செய்யக்கூடாது என்பதற்காக 12 நபர்களுக்கும் ஒரு வருட காலத்திற்கு அமைதி காப்பீர் என்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்படும். ஒரு வருடத்திற்கு சிறையில் வைக்க நேரிடும் என வட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் புகலூர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த 12 நபர்களுக்கும் இதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக ஜல்ஜீவன் திட்டம் பணிகள் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளை காலை மாவட்ட ஆட்சியர் நேரில் பொதுமக்களை சந்தித்து இது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் பாதுகாப்பு பணிக்காக வேலாயும்பாளையம் போலீசார் ஈடுபட்டனர்.

 

 

 

தலைப்பு செய்திகள்

கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
"டெல்லி போகக் கூடாதா?" - தமிழக விவசாயிகளை வழியிலேயே இறக்கிவிட்ட மராட்டிய போலீஸ்! விஜய் அரசு கண்டிக்கக் கோரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget