மேலும் அறிய

Bus Strike: போக்குவரத்துறை போராட்டத்திற்கு மத்தியில் இயக்கப்படும் பேருந்துகள்; தமிழ்நாடு முழுவதும் என்ன நிலை?

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை தொடங்கிவிட்டதால் போதுமான பேருந்துகள் இயங்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போதுமான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 

இயக்கப்படும் பேருந்துகளின் விபரம்

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில் காலை முதல் 2,098 எம்.டி.சி பேருந்துகள் மாநகராட்சி முழுவதும் இயக்கப்பட்டுவருவதாக கோட்ட மேலாளர் அல்பி ஜான் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 700 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தால் 80 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் சேலம் கோட்டம்  மற்றும் விழுப்புரம் கோட்டம் ஆகிய இரு போக்குவரத்து பணிமனையில் உள்ளன. சேலம் கோட்டத்தில் மொத்தம் 64 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 44 புறநகர் பகுதிகளிலும் 20 நகர் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் ஆகும். இப்படியான நிலையில் புறநகருக்கு 11 பேருந்துகளும், நகர் பகுதிகளுக்கு 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 25 பேருந்துகள் இயக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 15 பேருந்துகள்தான் இயக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் விழுப்புரம் பணிமனையில் இருந்து இயல்பு நாட்களில் மொத்தம் 119 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் 95 பேருந்துகள் புறநகர் பகுதிகளிலும் 24 பேருந்துகள் நகர் பகுதியில் இயக்கப்படுகின்றன. ஆனால் தற்போது புறநகர் பகுதிகளுக்கு 14 பேருந்துகளும் நகர் பகுதிகளுக்கு 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன.  மேலும் தற்போது வரை 48 பேருந்துகள் பணிமனையில் இருந்து சென்றிருக்க வேண்டும்.  ஆனால் 17 பேருந்துகள் மட்டுமே சென்றுள்ளது. இதனால் 31 பேருந்துகள் இயக்கப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

கரூரைப் பொறுத்தவரையில் இன்று காலை 06.30 மணி நிலவரப்படி கரூர் பேருந்து நிலையத்தில் 60 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றது. மேலும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இயங்கி வருகிறது. போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

திருவண்ணாமலையைப் பொறுத்தவரையில் இன்று காலை 07.00 மணி நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில்  உள்ள 10 பணிமனைகளில் இருந்தும் 95 சதவீத பேருந்துகள் இயங்கி வருகின்றது. மேலும் தனியார் பேருந்துகள் அனைத்தும் இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

 விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில் , காலை நிலவரப்படி  1200 பேருந்துகள் இயங்க வேண்டிய சூழலில், தற்பொழுது வரை 950 க்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விழுப்புரம் போக்குவரத்து துறை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 மண்டலங்களில் 3054 புறநகர் பேருந்துகளும் கிராமபுறபேருந்துகள் 758 இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் கோட்டத்தில் 50 சதவிகித பேருந்துகள் பணிமனைகளில் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கிராமபுறங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் கனிமசமான எண்ணிக்கையிலும் திருச்சி, மதுரை, சென்னை, கடலூர் போன்ற நகரங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. 

சேலம் கோட்டத்தில் இருந்து அனைத்து அரசு பேருந்துகளும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, கரூர், கோவை, திருச்சி, நாமக்கல், சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளானது இயக்கப்பட்டு வருகிறது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காலை செல்லக்கூடிய 144 பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.  பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget