மேலும் அறிய

தமிழ்நாட்டில் 49 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது பேருந்து சேவைகள்..!

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக இயக்கப்படாமல் இருந்து பேருந்துகள் 49 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் பொதுப்போக்குவரத்து சேவைக்கு தடை, காய்கறி மளிகை கடைகளுக்கு திறக்க நேரம் நிர்ணயம் உள்பட இயல்பு வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இடையில் கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் இரு வாரத்திற்கு எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் கோவை, திருப்பூர் நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் முதல் வகையாகவும், பெரம்பலூர், திருச்சி, மதுரை உள்பட 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மூன்றாவது வகையாகவும் வகைப்படுத்தப்பட்டது.

இதில், மூன்றாவது வகையில் இடம்பெற்றிருந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 21-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளுக்கும், சென்னையில் மெட்ரோ சேவைகளுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி, அந்த 4 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஒரு வாரமாக பேருந்து சேவை இயங்கி வந்தது.


தமிழ்நாட்டில் 49 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது பேருந்து சேவைகள்..!

இந்த நிலையில், தமிழக அரசின் புதிய ஊரடங்கு தளர்வுகளின்படி முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்கள் தவிர, இரண்டாவது வகையில் இடம்பெறுள்ள 23 மாவட்டங்களுக்கும் பேருந்து சேவைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏற்கனவே பேருந்து சேவைகள் அமலில் உள்ள 4 மாவட்டங்கள் மற்றும் புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ள 23 மாவட்டங்களுக்கு இடையேயும் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும். மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 49 நாட்களுக்கு பிறகு இன்று காலை 6 மணி முதல் இயங்கத் தொடங்கியது.

இதற்காக, மாநிலம் முழுவதும் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பேருந்துகள் நீண்ட நாட்களுக்கு பிறகு இயங்குவதால் ஓட்டுநர்கள் பேருந்துகளுக்கு தேங்காயில் சூடம் ஏற்றி வழிபட்டனர். விரைவுப் பேருந்துகள் 49 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட உள்ளதால் பேருந்து பணிமனைகளில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. முன்னதாக, கடந்த சில தினங்களாக பேருந்துகளில் பழுதுபார்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் 49 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது பேருந்து சேவைகள்..!

நீண்ட நாட்களுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ள பேருந்து சேவையில் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பேருந்துகளில் ஏறும்போது சானிடைசரை பயன்படுத்த வேண்டும் என்றும், பேருந்துகளில் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடன் காலை முதல் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். முதல் வகையில் இடம்பெற்றுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, மயிலாடுதுறை, உள்ளிட்ட 11 மாவட்டங்கள் நீங்கலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

 

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
Top 5 budget cars : ரூ.5 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 பட்ஜெட் கார்கள் இதோ!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
பிரெஞ்சு நகரத்தில் டிராம் பயணம்: புதுச்சேரியில் பாரீஸ் பாணியில் களமிறங்கும் பேட்டரி டிராம்!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget