மேலும் அறிய

IAS Officers Transfer: ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு புது மாவட்ட ஆட்சியர்கள் - பின்னணி என்ன?

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு இன்று (பிப்ரவரி 3 ஆம் தேதி) உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்திய நிலையில் அந்த மாவட்ட ஆட்சியர்கள் தற்போது இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்  தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி 1 ஆம்  தேதி வெளியான அறிவிப்பில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான விவரங்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த ஜனவரி 30ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

அதன்படி நெல்லை மாவட்ட ஆட்சியராக கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன், விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேக்கப், விழுப்புரம் ஆட்சியராக பழனி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதேபோல் கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி ஆட்சியராக ஷாஜிவாணா, கோவை ஆட்சியராக கிராந்தி குமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி நியமிக்கப்பட்டனர்.

மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாடு துறை இணை செயலாளராகவும், விருதுநகர் ஆட்சியராக இருந்த மேகநாத ரெட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும், சிறப்பு திட்ட செயலாக்க அதிகாரியாக  கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த  ஸ்ரீ வெங்கட ப்ரியா ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுத்துறை கட்டுப்பாடு அலுவலராகவும், தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவும், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த   காயத்ரி கிருஷ்ணன், வணிக வரித்துறை இணை ஆணையராகவும்,மயிலாடுதுறை ஆட்சியராக இருந்த லலிதா தொழில்நுட்ப கல்வி இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

இந்நிலையில், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு இன்று (பிப்ரவரி 3 ஆம் தேதி) உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்படி, சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ், ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷாவா இட மாற்றம் செய்யப்பட்டு, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

பின்னணி என்ன?

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் அந்த மாவட்ட ஆட்சியர்கள் இருவரும் தற்போது இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
T20 WC FINAL IND VS SA : இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
T20 WC FINAL IND VS SA : இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
தமிழகத்திற்கு தேவையான எரிவாயு அபரிமிதமான அளவிற்கு  இங்கே உள்ளது - காவிரி அசட் உற்பத்தி பிரிவு மேலாளர் மாறன்
தமிழகத்திற்கு தேவையான எரிபொருள் இறக்குமதி செய்தால் அதன் சுமை மறைமுகமாக மக்களை சென்றடையும் -  மாறன்
Vijay Antony: முகத்தில் கரியுடன் விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ
Vijay Antony: முகத்தில் கரியுடன் விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ
Maari Serial: தேன்மொழியை டார்ச்சர் செய்த தாரா.. சூழ்ச்சி செய்து ப்ளானை முறியடித்த ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!
Maari Serial: தேன்மொழியை டார்ச்சர் செய்த தாரா.. சூழ்ச்சி செய்து ப்ளானை முறியடித்த ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!
Embed widget