மேலும் அறிய

வழிமாறிய சிறுவன்... தேடி அலைந்த பெற்றோர்... ‛வாட்டர் கேன்’ வாலிபரால் இணைந்த உருக்கமான நிகழ்வு

தனது வீட்டிலிருந்து வழி தவறி குன்றத்தூரில் சிறுவன் தவித்துக் கொண்டிருக்க, காணாமல் அவரது பெற்றோர் ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க, வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபரால் அந்த சிறுவன் பெற்றோரிடத்தில் சென்றடைந்த உருக்கமான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தனது வீட்டில் இருந்து வழி தவறி வந்த சிறுவனை உரிய நேரத்தில் பத்திரமாக மீட்டு அவருடைய பெற்றோரிடம் சேர்க்க உதவிய ‛வாட்டர் கேன்’ வினியோகம் செய்யும் இளைஞர் தான் இப்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.   சென்னையை அடுத்த குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பேருந்தில் உள்ளாடை மட்டும் அணிந்த சிறுவன் ஒருவர் அமர்ந்து கொண்டு, நான் பீச்சுக்கு போக  வேண்டும் என்று நடத்துனரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதைக் கண்ட பேருந்தின் நடத்துனர் அந்த சிறுவனுடன் யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்து  உடனடியாக அந்த சிறுவனை பேருந்தில் இருந்து கீழே இறக்கி அழைத்து சென்று அருகில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். 


வழிமாறிய சிறுவன்... தேடி அலைந்த பெற்றோர்... ‛வாட்டர் கேன்’ வாலிபரால் இணைந்த உருக்கமான நிகழ்வு

இதனையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த சிறுவன் யார் ? எங்கிருந்து வந்தான் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுவன் தனது தாயின் பெயர் திவ்யா என்று மட்டும் கூறியுள்ளான். மேலும் தான் சென்னை கடற்கரையில் இருப்பதாகவும் , தன்னை அங்கு அழைத்துச் செல்லுமாறும் அந்த சிறுவன் போலீசாரிடம் கூறியுள்ளான். அங்கு குடியிருந்த மக்களும் போலீசாரும் எவ்வளவு கேட்டும் வீட்டு முகவரியை சொல்ல அந்த சிறுவனால் முடியவில்லை. இந்நிலையில் அந்த வழியாக வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்தார். ‛அந்த சிறுவனை தான் பார்த்துள்ளதாக அவர் கூறியதுடன், சிறுவனின் வீடு இருக்கும் பகுதியும் தெரியும்,’ என கூறினார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில்,  பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் அங்கிருப்பது தெரியாமல், பிள்ளை காணவில்லையே என பெற்றோர் அவர்கள் வசிக்கும் பகுதியில் தேடி அலைந்துள்ளனர். 

போலீசார் அந்த சிறுவனை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குள் பெற்றோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காணாமல் தேடிய குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் சிறுவனை கட்டி அழுதனர்.  வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து சிறுவன் இறங்கி நடந்து வந்ததாகவும், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் காலில் செருப்பு அணியாமல்  அந்த சிறுவன் சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டில் இருந்து நடந்து வந்தது அதன் பிறகு தெரியவந்தது. இதனையடுத்து வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் நபர், உரிய நேரத்தில் அந்த சிறுவனை அடையாளம் கண்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க உதவிய சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வழிமாறிய சிறுவன்... தேடி அலைந்த பெற்றோர்... ‛வாட்டர் கேன்’ வாலிபரால் இணைந்த உருக்கமான நிகழ்வு

பெற்றோர்களின் கவனக்குறைவால் சிறுவர்கள் பலர் இதுபோன்று காணாமல் போகும் பல சம்பவங்கள் தினமும் அரங்கேறுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் நாடு தற்போது சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை மிகவும் கவனமாக கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு குன்றத்தூரில் நடத்த நிகழ்வு ஒரு சான்றாக அமைத்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் மீது கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget