மேலும் அறிய

திடீரென நீல நிறத்தில் ஜொலித்த கடல்... பார்த்து ரசித்த பொதுமக்கள்! காரணம் என்ன?

மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரை பதியில் இரவு நேரத்தில் கடல் அலைகள்  நீல நிறத்தில் ஜொலித்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

விழுப்புரம் ; மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரை பதியில் இரவு நேரத்தில் கடல் அலைகள்  நீல நிறத்தில் ஜொலித்ததால் கடலுக்கு சென்றவர்கள் அடர் நீல நிற கடல் அலையை கண்டு ஆச்சரியபட்டனர்.

நீல நிறத்தில் ஜொலித்த கடல்

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த ‘என் அண்ணன்’ திரைப்படத்தில், ‘நீல நிறம்.. வானுக்கும், கடலுக்கும் நீலநிறம்..’ என்ற பாடல் வரிகள் காதலியை வர்ணிப்பது போல் இடம் பெற்றிருக்கும். எல்லோரும் வானம் நீல நிறத்தில் இருப்பதை தினமும் பார்க்கிறோம். ஆனால் கடல் நீர் நீல நிறத்தில் இருப்பதை யாரும் பார்த்திருக்க முடியாது. உயரமான இடத்தில் இருந்து கழுகுப் பார்வையில் ஆழ்கடலை பார்க்கும்போது, அது நீல நிறத்தில் இருப்பது தெரியும். ஆனால், கரையோரம் அலையாக வரும் கடல் நீரை உற்றுநோக்கினால், அது எந்த நிறத்திலும் தெரியாது.

ஆனால், நேற்று இரவு சென்னை திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம்  உள்ளிட்ட பகுதிகளில் கடற் கரையோரம் சீறி எழுந்த அலைகள் நீல நிறத்தில் ஜொலிப்பதை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்தனர். ஆர்வம் மிகுதியால் சிலர், அதை தங்களது செல்போன் கேமராவில், வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்து, வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரையில் இரவு நேரத்தில் ஒளிரும் ஃப்ளோரசன்ட் அலைகள் எழுவது மனதிற்கு இதமளிப்பதாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் X தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

ஏன் பெருங்கடல்கள் பச்சை நிறத்தில் தோன்றும்?

சில சமயங்களில் கடல் நீலத்தைத் தவிர வேறு நிறங்களாகத் தோன்றும். உதாரணமாக, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள அட்லாண்டிக் பொதுவாக பச்சை நிறத்தில் காணப்படும். இது ஆல்கா மற்றும் தாவர வாழ்க்கையின் இருப்பு காரணமாகும். ஒளிச்சேர்க்கை உயிரினங்களில் குளோரோபில் உள்ளது , இது பச்சை நிறத்தில் தோன்றுவது மட்டுமல்லாமல் சிவப்பு மற்றும் நீல ஒளியையும் உறிஞ்சுகிறது. பைட்டோபிளாங்க்டனின் வகையைப் பொறுத்து, நீர் நீல-பச்சை முதல் மரகத-பச்சை வரை தோன்றும்.

மஞ்சள், பழுப்பு மற்றும் சாம்பல் பெருங்கடல்கள்

கடல் மேகமூட்டமான வானத்தின் கீழ் சாம்பல் நிறமாகவோ அல்லது தண்ணீரில் நிறைய வண்டல் இருக்கும் போது பழுப்பு நிறமாகவோ தோன்றும், ஒரு நதி கடலில் கலக்கும் போது அல்லது புயலால் தண்ணீர் கிளர்ந்தெழுந்த பிறகு.

வண்டலின் வேதியியல் கலவை நீரின் நிறத்தில் ஒரு பங்கு வகிக்கிறது. டானின்கள், எடுத்துக்காட்டாக, தண்ணீரை கருப்பு, பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாற்றும். தண்ணீரில் உள்ள வண்டல் நிறைய ஒளிஊடுருவுவதற்கு பதிலாக ஒளிபுகா செய்கிறது.

சிவப்பு பெருங்கடல்கள்

சில சமுத்திரங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். ஒரு குறிப்பிட்ட வகை பைட்டோபிளாங்க்டன் "சிவப்பு அலையை" உருவாக்க போதுமான அதிக செறிவை அடையும் போது இது நிகழ்கிறது. சில நேரங்களில் பாசிகள் நச்சுகளை தண்ணீரில் வெளியிடுகின்றன, ஆனால் அனைத்து சிவப்பு அலைகளும் தீங்கு விளைவிப்பதில்லை.  மெக்ஸிகோ வளைகுடாவில் உள்ள கரேனியா ப்ரீவிஸ் ,  செசாபீக் விரிகுடாவில் உள்ள அலெக்ஸாண்டிரியம் மோனிலேட்டம் மற்றும் லாங் ஐலேண்ட்  சவுண்டில்   உள்ள மெசோடினியம் ரப்ரம் ஆகியவை சிவப்பு ஆல்கா மற்றும் கடல் சிவப்பாக இருக்கும் இடங்களுக்கு எடுத்துக்காட்டுகள் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவ் கைது - அமெரிக்காவின் அடுத்த மூவ் என்ன?
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
16வது நாளில் நடந்த சோகம் - சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Gold Rate: இதுதான் புதிய உச்சம்..! ரூ.58 ஆயிரத்தை கடந்த ஆபரண தங்கம் விலை - ஒரு கிராம் இவ்வளவா?
Kandha Shasti Festival: அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
அரோகரா! முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திருவிழா எப்போது? ஏன் இந்த கொண்டாட்டம்?
Diwali Bonus : அரசு ஊழியர்களுக்கு  தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த முதலமைச்சர்.. குஷியில் ஊழியர்கள்..
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
CM Stalin: தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் கிடுக்குப்பிடி கேள்வி, ஆளுநர் பதில் அளிப்பாரா?
Embed widget