மேலும் அறிய

JP Nadda : எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த ஜே.பி.நட்டா..! என்ன சொன்னார் தெரியுமா..?

கூட்டாட்சியில் பிரதமர் மோடிக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், கூட்டாட்சி துத்துவத்தில் நம்பிக்கை கொள்ளாமல் திமுக அரசு வீணரசியல் செய்து வருகிறது என்று ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஒரு புண்ணியபூமி என்றும் மாநிலத்திற்கு வரும்போது தனக்கு புத்துணர்வு கிடைப்பதாகவும் பாஜக தேசிய தலைவர் நட்டா இன்று தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த இரண்டு நாள்களாக, பல்வேறு தரப்பினரிடமும் பா.ஜ.க. நிர்வாகிகளிடமும் பேசியதிலிருந்து பா.ஜ.க.வின் ஆதரவு பெருகி இருப்பதை பார்க்கிறேன். பிரதமர் மோடியின் வளர்ச்சி கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், பிற கட்சி தொண்டர்கள் ஆகியோர் பெரிய எண்ணிக்கையில் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.

மோடியின் இதயத்தில் தமிழ்நாட்டிற்கு என தனித்த இடம் இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து உதவி பெரும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. கூட்டாட்சியில் பிரதமர் மோடிக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், கூட்டாட்சி துத்துவத்தில் நம்பிக்கை கொள்ளாமல் தி.மு.க. அரசு வீணாக அரசியல் செய்து வருகிறது. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அதிகபட்ச நிதியை ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடியின் ஆட்சியில் சிறப்பான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிந்த அளவுக்கு விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு மக்களை தவறாக வழிநடத்துகிறது. தமிழ்நாட்டில் மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது. மற்றவர்களை குறை கூறும் அரசியல் செய்கிறது. 

மின் கட்டணம், சொத்து வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. யார் கட்டணத்தை உயர்த்துகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு படித்த தலைவர்கள் கிடைத்திருக்க வேண்டும். எது மாநில பட்டியலில் வரும்? எது மத்திய பட்டியலில் வரும்? எது பொது பட்டியலில் வரும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இது நியாயம் அல்ல. எங்களுக்கு வளர்ச்சியில் நம்பிக்கை இருக்கிறது. பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், விளிம்புநிலை மக்களை உயர்த்துவதில் மோடி நம்பிக்கை கொண்டுள்ளார்.

வாரிசு அரசியல், பண விநியோகம், கட்டப்பஞ்சாயத்து அரசியல் செய்கிறது தி.மு.க. அவர்கள் ஊழல் செய்து வருகின்றனர். அதை சட்டப்பூர்வமாக்கி வருகின்றனர். தமிழ்நாடு மக்களுக்கு மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அமைய வேண்டும் என விரும்புகின்றனர். 

எய்ம்ஸ் தொடர்பாக நான் பேசியது குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை பதில் அளிப்பார். நான் ஒன்றே ஒன்று சொல்லி கொள்கிறேன். தயவு செய்து படித்த தலைவர்களை வைத்து கொள்ளுங்கள். முதலீடுக்கு முன்பான ஆய்வு என்றால் என்ன? எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது? என்பதை புரிந்து கொள்ளும் தலைவர்கள் வேண்டும். எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget