மேலும் அறிய

‘பெருமாளே என்னுடைய கலைமாமணி விருதைதான் அணிந்திருக்கிறார்’ ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடன கலைஞர் ஜாகிர் உசேன் உருக்கம்..!

’கடவுளை நம்பும் எவரும், எந்த கோயிலுக்குள் போனாலும் அவர்களை தடுக்கக் கூடாது என்று முதல்வர் உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை சட்டத்தில் இதற்கு சிறிய திருத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை’

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்ல முயன்ற கலைமாமணி விருது பெற்ற பிரபல நடன கலைஞரான ஜாகிர் உசேனை, இசுலாமியர் என்பதற்காக கோயிலுக்குள் நுழைய விடாமல் அவரை வெளியே தள்ளிய விவகாரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ஜாகிர் உசேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உண்மையில் நடந்தது என்ன என அவரிடம்  கேட்டோம் :-

‘பெருமாளே என்னுடைய கலைமாமணி விருதைதான் அணிந்திருக்கிறார்’ ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடன கலைஞர் ஜாகிர் உசேன் உருக்கம்..!
பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன்

ஜாகிர் உசேன் : தன்னை வைணவன்  என பொய்யை சொல்லிக்கொண்டு திரியும் ரங்கராஜன் எனும் நபர், என்னை கோயிலில் இருந்து இசுலாமியர் என்பதற்காக நெட்டி தள்ளி, தவறான வார்த்தைகளை பிரயோகித்து வெளியே தள்ளினார்.

கேள்வி : இதற்கு முன்னர் நீங்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு இருக்கீன்றீர்களா ? ஏனென்றால், இந்து அல்லாதவர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதி இல்லை என அறநிலையத்துறை போர்டே வைத்திருப்பார்களே ?

ஜாகிர் உசேன் : பல முறை கோயிலுக்குள் சென்றிருக்கிறேன். நான் இப்போது புதிதாக அங்கு செல்லவில்லை. கோயில் சார்பாகவே நடன நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி, அதில் ஆடியுள்ளேன்.

கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்லக் கூடாது என்று போர்டு வைத்திருப்பது உண்மைதான். ஆனால், அது உண்மையான பக்தர்களை கட்டுப்படுத்தாது. இவ்ளோ பெரிய கோயிலில் யார் இந்து, யார் கிறிஸ்துவர், யார் இசுலாமியர் என்பது எப்படி தெரியும் ?

‘பெருமாளே என்னுடைய கலைமாமணி விருதைதான் அணிந்திருக்கிறார்’ ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடன கலைஞர் ஜாகிர் உசேன் உருக்கம்..!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஜாகிர் உசேன்

முதலில் பிராமணர்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதி இல்லை என்றார்கள். பின்னர், உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றார்கள். அதன்பிறகு அனைத்து இந்துக்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீய எண்ணத்தோடு மற்ற மதத்தினர் உள்ளே வந்து ஏதுவும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற விதி ஏற்படுத்தப்பட்டது. தூய நோக்கம், நல்லம் எண்ணம் கொண்ட பக்தர்களை இது கட்டுப்படுத்தாது.

விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் கோயிலில் கூட இசுலாமியர்கள் தான் முன்னின்று கோயில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். திருப்பதிக்கு நான் செல்லும்போது யாரும் என்னை தடுத்து நிறுத்தவில்லை. ஆண்டாள் கோயிலில் ஆடியிருக்கிறேன். உபன்யாசம் செய்திருக்கிறேன்.

உப்பிலியப்பன் கோயிலில் ஆடியிருக்கிறேன். சாரநாத பெருமாளுக்கு என்னுடைய கலைமாமணி விருதை அர்ப்பணித்திருக்கிறேன். அதைதான் பெருமாள் இன்னும் அணிந்துக்கொண்டிருக்கிறார். 

பக்தி இருந்துவிட்டால் இந்து என்ன ? முஸ்லீம் என்ன ? எத்தனை இசுலாமிய பெண்மணிகள் படுதா போட்டுக்கொண்டு ஆண்டாள் கோயிலுக்கு வருகிறார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குள் இசுலாமியர்கள் வரவில்லையா ? திருவல்லிக்கேணி கோயிலில் வெள்ளம் வந்து, ஒரே சேரும் சகதியுமாக கிடந்தபோது அதை சுத்தம் செய்தவர்கள் இசுலாமியர்கள் தானே ? அப்போது உங்களுக்கு மதம் தெரியவில்லையா ? நல்ல நோக்கத்தோடு வந்து யார் வேண்டுமானலும் பெருமாளை சேவிக்கலாம். அப்படி இருக்கும்போது இப்படி ஒரு சட்டம் எதற்கு ?‘பெருமாளே என்னுடைய கலைமாமணி விருதைதான் அணிந்திருக்கிறார்’ ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடன கலைஞர் ஜாகிர் உசேன் உருக்கம்..!

கேள்வி : தமிழக அரசிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன ?

ஜாகிர் உசேன் : கடவுளை நம்பும் எவரும், எந்த கோயிலுக்குள் போனாலும் அவர்களை தடுக்கக் கூடாது என்று முதல்வர் உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை சட்டத்தில் இதற்கு ஒரு சிறிய திருத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget