மேலும் அறிய

Bail vs Parole: பரோலுக்கும் ஜாமினுக்கும் என்ன வித்தியாசம்? ‛7 பேரும் கிட்டத்தட்ட விடுதலை’ என்கிறார் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்!

‛‛ஏழு பேரும் விடுதலை ஆக அனைத்து அம்சங்களும், உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ளது,’’

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதுவரை பரோலில் மட்டுமே சென்று வந்த அவருக்கு, தற்போது கிடைத்துள்ள ஜாமின் எந்த வகையில் உதவும், சட்ட ரீதியாக பரோல், ஜாமின் இடையேயான வித்தியாசம் என்ன என்பது குறித்து, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் ஏபிபி நாடு சார்பில் சிறப்பு பேட்டி எடுக்கப்பட்டது. இதோ அந்த பேட்டி...


Bail vs Parole: பரோலுக்கும் ஜாமினுக்கும் என்ன வித்தியாசம்? ‛7 பேரும் கிட்டத்தட்ட விடுதலை’ என்கிறார் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்!

கேள்வி: பரோலுக்கும், ஜாமினுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பதில்: பரோல் என்பது அரசு வழங்கும் நடைமுறை. அது நாள் குறிப்பிடப்பட்ட நடவடிக்கை, ஒரு மாதம் வழங்கலாம். அதன் பின் மீண்டும் அதை நீட்டிக்கலாம், அல்லது நிராகரிக்கலாம். அது கட்டுப்பாடுகளை கொண்டது. போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எதையும் செய்ய முடியாது. போலீஸ் பாதுகாப்போடு தான், எதையும் அணுக முடியும். கிட்டத்தட்ட சிறையில் இருப்பதைப் போன்றது தான் பரோல். வீட்டுச் சிறை. ஜாமின் என்பது, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எந்த போலீஸ் பந்தபஸ்தும் தேவையில்லை. ஜாமின் பெற்றவர் நினைத்த இடத்திற்கு செல்ல முடியும். 

கேள்வி: ஜாமின் பெற்ற பேரறிவாளன், இனி வழக்கு தொடர்பாக ஆஜராகவோ, சிறை செல்லவோ வாய்ப்பு உள்ளதா?

பதில்: இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஏற்கனவே குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, அதற்கான தண்டனையை அனுபவித்தவர் பேரளிவாளன். இனி வழக்கு விசாரணைக்கு வரப்போவதில்லை. எனவே வழக்கு தொடர்பான விவகாரங்களில் அவர் ஆஜராக வேண்டியதில்லை. கிட்டத்தட்ட விடுதலை ஆனதைப் போன்றது தான். வழக்கு முடிந்துவிடாது. நிலுவை வழக்கு என்று இருக்கும். அவ்வளவு தான், மற்றபடி விடுதலை ஆனது மாதிரி தான். இது அவர்களுக்கு பெரிய ரிலீப். 

கேள்வி: இந்த ஜாமின் உத்தரவு, தமிழ்நாடு அரசின் விடுதலை தீர்மானத்திற்கு உதவுமா?

பதில்: 100 சதவீதம் உதவும். உச்சநீதிமன்றம் உத்தரவை வைத்து, தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஜனாதிபதி ஏன் ஏற்க முடியாது என்கிற கேள்வி வரும். ஜாமின் வழங்க கூறிய காரணங்களின் அடிப்படையில், அவரை வழக்கிலிருந்து விடுவிக்க தமிழ்நாடு எடுக்கும் முயற்சி பெரிய பலன் தரும். 

கேள்வி: பேரறிவாளனின் ஜாமின், இதே வழக்கில் உள்ள மற்ற 6 பேருக்கு உதவுமா?

பதில்: அவர்களும் ஜாமின் கேட்பார்கள். அவர்களுக்கும் அது சாதகமாக அமையும். ஒரே வழக்கில் ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்ட பிறகு, மற்றவர்களுக்கும் வழங்கி தான் ஆக வேண்டும். அவ்வாறு அவர்கள் ஜாமின் கேட்கும் போது, அது அவர்களுக்கு சாதகமாகவே அமையும். பேரறிவாளன் போன்றே, நளினியும் பரோலில் உள்ளார். அவரும் கேட்பார். ஒரு வழக்கை வைத்து, அதன் அடிப்படையில் அதே வழக்கை சார்ந்தவர்களும் ஜாமின், விடுதலை கேட்பது இயல்பானது. அதிலும் இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. அதை மேற்கோள் காட்டி எளிதில் ஜாமின் பெறலாம். 

கேள்வி: தமிழ்நாடு அரசு வழங்கிய பரோல் தான், ஜாமின் பெற காரணமா?

பதிலும்: அதுவும் ஒரு காரணம். பரோலில் அவர்கள் நன்னடத்தை சரியாக இருந்ததால் தான், அந்த பரோலை தமிழ்நாடு அரசு நீட்டித்தது. ஒரு வேளை அவர்கள் பரோலை நிராகரித்திருந்தாலோ, நீட்டிக்காமல் இருந்திருந்தாலோ, பேரறிவாளனின் நன்னடத்தை பற்றிய சந்தேகம் எழுந்திருக்கும். இப்போது, வழங்கப்பட்ட பரோலில் அவர் நன்னடத்தை சரியாக இருந்ததும், அவருக்கு ஜாமின் கிடைக்க ஒரு காரணமாக அமைந்தது. 

கேள்வி: இந்த ஜாமின் உத்தரவு, எழுவர் விடுதலைக்கு வித்திடுமா?

பதில்: 100 சதவீதம் உதவும். அதற்கான அனைத்து அம்சங்களும் உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சுடுகாடு பிரச்சினை: கோட்டகுப்பத்தில் மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை முயற்சி போராட்டம் - கடலோரக் கிராமத்தில் பெரும் பதற்றம்!
சுடுகாடு பிரச்சினை: கோட்டகுப்பத்தில் மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை முயற்சி போராட்டம் - கடலோரக் கிராமத்தில் பெரும் பதற்றம்!
விழுப்புரம்: ஜூன் 10-ல் நாட்டுப் படகுகள் நேரடி ஆய்வு - கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கடும் எச்சரிக்கை!
விழுப்புரம்: ஜூன் 10-ல் நாட்டுப் படகுகள் நேரடி ஆய்வு - கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கடும் எச்சரிக்கை!
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget