மேலும் அறிய

Bail vs Parole: பரோலுக்கும் ஜாமினுக்கும் என்ன வித்தியாசம்? ‛7 பேரும் கிட்டத்தட்ட விடுதலை’ என்கிறார் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்!

‛‛ஏழு பேரும் விடுதலை ஆக அனைத்து அம்சங்களும், உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ளது,’’

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதுவரை பரோலில் மட்டுமே சென்று வந்த அவருக்கு, தற்போது கிடைத்துள்ள ஜாமின் எந்த வகையில் உதவும், சட்ட ரீதியாக பரோல், ஜாமின் இடையேயான வித்தியாசம் என்ன என்பது குறித்து, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் ஏபிபி நாடு சார்பில் சிறப்பு பேட்டி எடுக்கப்பட்டது. இதோ அந்த பேட்டி...


Bail vs Parole: பரோலுக்கும் ஜாமினுக்கும் என்ன வித்தியாசம்? ‛7 பேரும் கிட்டத்தட்ட விடுதலை’ என்கிறார் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்!

கேள்வி: பரோலுக்கும், ஜாமினுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பதில்: பரோல் என்பது அரசு வழங்கும் நடைமுறை. அது நாள் குறிப்பிடப்பட்ட நடவடிக்கை, ஒரு மாதம் வழங்கலாம். அதன் பின் மீண்டும் அதை நீட்டிக்கலாம், அல்லது நிராகரிக்கலாம். அது கட்டுப்பாடுகளை கொண்டது. போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எதையும் செய்ய முடியாது. போலீஸ் பாதுகாப்போடு தான், எதையும் அணுக முடியும். கிட்டத்தட்ட சிறையில் இருப்பதைப் போன்றது தான் பரோல். வீட்டுச் சிறை. ஜாமின் என்பது, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எந்த போலீஸ் பந்தபஸ்தும் தேவையில்லை. ஜாமின் பெற்றவர் நினைத்த இடத்திற்கு செல்ல முடியும். 

கேள்வி: ஜாமின் பெற்ற பேரறிவாளன், இனி வழக்கு தொடர்பாக ஆஜராகவோ, சிறை செல்லவோ வாய்ப்பு உள்ளதா?

பதில்: இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஏற்கனவே குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, அதற்கான தண்டனையை அனுபவித்தவர் பேரளிவாளன். இனி வழக்கு விசாரணைக்கு வரப்போவதில்லை. எனவே வழக்கு தொடர்பான விவகாரங்களில் அவர் ஆஜராக வேண்டியதில்லை. கிட்டத்தட்ட விடுதலை ஆனதைப் போன்றது தான். வழக்கு முடிந்துவிடாது. நிலுவை வழக்கு என்று இருக்கும். அவ்வளவு தான், மற்றபடி விடுதலை ஆனது மாதிரி தான். இது அவர்களுக்கு பெரிய ரிலீப். 

கேள்வி: இந்த ஜாமின் உத்தரவு, தமிழ்நாடு அரசின் விடுதலை தீர்மானத்திற்கு உதவுமா?

பதில்: 100 சதவீதம் உதவும். உச்சநீதிமன்றம் உத்தரவை வைத்து, தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஜனாதிபதி ஏன் ஏற்க முடியாது என்கிற கேள்வி வரும். ஜாமின் வழங்க கூறிய காரணங்களின் அடிப்படையில், அவரை வழக்கிலிருந்து விடுவிக்க தமிழ்நாடு எடுக்கும் முயற்சி பெரிய பலன் தரும். 

கேள்வி: பேரறிவாளனின் ஜாமின், இதே வழக்கில் உள்ள மற்ற 6 பேருக்கு உதவுமா?

பதில்: அவர்களும் ஜாமின் கேட்பார்கள். அவர்களுக்கும் அது சாதகமாக அமையும். ஒரே வழக்கில் ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்ட பிறகு, மற்றவர்களுக்கும் வழங்கி தான் ஆக வேண்டும். அவ்வாறு அவர்கள் ஜாமின் கேட்கும் போது, அது அவர்களுக்கு சாதகமாகவே அமையும். பேரறிவாளன் போன்றே, நளினியும் பரோலில் உள்ளார். அவரும் கேட்பார். ஒரு வழக்கை வைத்து, அதன் அடிப்படையில் அதே வழக்கை சார்ந்தவர்களும் ஜாமின், விடுதலை கேட்பது இயல்பானது. அதிலும் இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. அதை மேற்கோள் காட்டி எளிதில் ஜாமின் பெறலாம். 

கேள்வி: தமிழ்நாடு அரசு வழங்கிய பரோல் தான், ஜாமின் பெற காரணமா?

பதிலும்: அதுவும் ஒரு காரணம். பரோலில் அவர்கள் நன்னடத்தை சரியாக இருந்ததால் தான், அந்த பரோலை தமிழ்நாடு அரசு நீட்டித்தது. ஒரு வேளை அவர்கள் பரோலை நிராகரித்திருந்தாலோ, நீட்டிக்காமல் இருந்திருந்தாலோ, பேரறிவாளனின் நன்னடத்தை பற்றிய சந்தேகம் எழுந்திருக்கும். இப்போது, வழங்கப்பட்ட பரோலில் அவர் நன்னடத்தை சரியாக இருந்ததும், அவருக்கு ஜாமின் கிடைக்க ஒரு காரணமாக அமைந்தது. 

கேள்வி: இந்த ஜாமின் உத்தரவு, எழுவர் விடுதலைக்கு வித்திடுமா?

பதில்: 100 சதவீதம் உதவும். அதற்கான அனைத்து அம்சங்களும் உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget