மேலும் அறிய

TN Corona Spike: தமிழ்நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 300-ஐ கடந்தது.. தினமும் 11 ஆயிரம் பரிசோதனைகள் எடுக்க திட்டம்..

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில், தினசரி ஆர்டிபிசிஆர் பரிசோதனை 11 ஆயிரமாக உயர்த்த சுகாதாரத்துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில், தினசரி ஆர்டிபிசிஆர் பரிசோதனை 11 ஆயிரமாக உயர்த்த சுகாதாரத்துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 300-ஐ கடந்து பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 303 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு என்பது 1,530-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 139 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும் கடந்த ஒரு மாத காலமாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வந்த 3 பேருக்கும், சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 4,189 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 303 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 497 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனையடுத்து கோவை மற்றும் செங்கல்பட்டில் தினசரி பாதிப்பு 20-ஐ கடந்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் தினசரி எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை 11 ஆயிரமாக உயர்த்த சுகாதார துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதார துறை தரப்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வெளியில் செல்லும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி தரப்பிலும் பொது சுகாதாரத்துறை தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் “இந்தியாவில் 24 மணி நேரத்தில் 6050 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 303 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 24,061 ஆக்சிஜன் கான்சண்டேட்டர்களும், 260 PSA பிளாண்ட்டுகளும், 2067 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் சேமிப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. எனவே ஆக்சிஜன், படுக்கைகள், மருந்து கையிருப்பு என அனைத்தும் 100% முழுமையாக உள்ளது” என குறிப்பிட்டார்.  பாதிப்புகள் அதிகமாக இல்லாமல் இருந்தாலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
Embed widget