மேலும் அறிய

Jayalalithaa Death: ”ரத்த வெள்ளத்தில் ஜெயலலிதா” ஆணையத்தில் ராம் மோகன் ராவ் சொன்ன திடுக்கிடும் தகவல்!

Jayalalithaa Death: ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் இருந்ததாக” மரணம் தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் சமர்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Jayalalithaa Death: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் இருந்ததாக மரணம் தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் சமர்பித்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி இரவு திடீர் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்து வந்த ரிப்போர்ட் மட்டுமே ஜெயலலிதா மற்றும் அவரது உடல் நிலை குறித்த அப்டேட்டுகளாக இருந்தது. முதலில் சாதாரண காய்ச்சல் என்று கூறப்பட்ட நிலையில்,  அதன் பின்னர் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக கூறப்பட்டது. 

விசாரணை ஆணைய அறிக்கை
விசாரணை ஆணைய அறிக்கை

 

அதன் பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல தரப்பிலிருந்தும் வேண்டுகோள்கள் எழுந்தது. குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது அணியில் இருந்த பலரும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறிவந்தனர். அதிமுக தரப்பில் பலரும் பல வகையில் பேசி வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் முழு விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தார். தமிழில் 608 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட விசாரணை அறிக்கை இன்று (அக்டோபர்,18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

 ரத்த வெள்ளத்தில் ஜெயலலிதா

அறிக்கையில் பக்கம் எண், 438 மற்றும் 439இல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததாக கூறப்பட்ட டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்தினம் மருத்துவமனை வார்டில் ரத்த வெள்ளத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளதாவது,   ’’தகவலின் பேரில் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறலும் மாரடைப்பு  ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறினர். மேலும், உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.

அப்போது வார்டில் வந்து பார்த்தபோது ”மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு திறந்த அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில்” இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். மேலும், அறுவை சிகிச்சை ஏன் வார்டில் செய்யப்படுகிறது? அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூறினேன். மேலும், இது குறித்து உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தகவலும் தெரிவித்தேன்.” என ராம் மோகன் ராவ் ஆணையத்திடம் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா ரக்த வெள்ளத்தில் கிடந்ததாக வந்துள்ள தகவல் அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஐசியு-வில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாமல் வார்டிலேயே திறந்த இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்த தகவல் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க, 

Jayalalithaa Death Case: “யானையை நரிகள் கொன்றுவிடும்” - ஜெ.மரணம் குறித்த அறிக்கையில் ஆணையம் சொல்வது என்ன?

Arumugasamy Commission : அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்தாரா? ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு தகவல்

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Embed widget