மேலும் அறிய

கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா எட்டாம் தேதி கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கியது. திருவிழாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா 48- பூத்தட்டுகள் கலந்து கொள்கின்றன.

கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு  ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழா மிக பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு விடுதல் நிகழ்ச்சியில் பல்லாயிர கணக்கான பொதுமக்கள் கூடி வழிபடுவது வழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. அதனால் கரூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களும் வேதனையில் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கோவில்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.


கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 

பக்தர்கள் ஆற்றில் நீராடி புனித நீர் மற்றும் பால் குடம் தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் கொண்டு வந்து மகிழ்வுடன் கம்பத்திற்கும் மாரியம்மனுக்கும் ஊற்றி செல்கின்றனர்.


கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 

கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.


கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 


கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 48- இடங்களிலிருந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்‌. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து, ஜவகர் பஜார் ,மார்க்கெட், மாரியம்மன் ஆலயம் வரையிலும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


கண்களை கொள்ளையடிக்கும் அழகுடன் கரூர்  ஸ்ரீ  மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!

 

பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் சமூக விரோதிகள் ஊடுருவாமல் கண்காணிக்கவும் பாதுகாப்பு பணியில் இரண்டு ஏடிஎஸ்பி, 5-டிஎஸ்பி, ஒன்பது காவல் ஆய்வாளர்கள், 30- துணை ஆய்வாளர்கள் தலைமையில், ஊர்க்காவல் படை மற்றும் ஆயுதப் படைப் பிரிவுகளை சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வைகாசிப் பெருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூச்செரிதல் விழாவை காண கரூர் நாமக்கல் திருச்சி திண்டுக்கல் ஈரோடு சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்மீக பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருந்து கண்ணுக்கு விருந்தாக இந்த பூச்செரிதல் விழாவை கண்டு ரசித்தனர். 

தலைப்பு செய்திகள்

பழனி கோயில் நில மோசடி வழக்கு; சிறையிலே உயிரிழந்த முக்கிய குற்றவாளி - யார்? என்னாச்சு?
பழனி கோயில் நில மோசடி வழக்கு; சிறையிலே உயிரிழந்த முக்கிய குற்றவாளி - யார்? என்னாச்சு?
CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. தவெகவை விளாசிய சீமான்!
CM Vijay: சிஎம் கடவுளின் குழந்தையா? .. தற்குறின்னு சும்மா சொல்லல.. தவெகவை விளாசிய சீமான்!
வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு செய்த மாபெரும் புரட்சி!
வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வது எப்படி? 'ஸ்டார் 3.0' மூலம் தமிழக அரசு புரட்சி!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget