மேலும் அறிய

Tungsten Mining: டங்ஸ்டன் சுரங்கம்; ’’விஷம வதந்தி ஏன்?- இரட்டை வேடம் போடுவது நீங்கள்தான்’’- அமைச்சர் துரைமுருகன் காட்டம்

முதலமைச்சரின்‌ இந்த நடவடிக்கையை மக்கள்‌ ஏற்றுக்‌ கொண்டதை சகிக்க முடியாத சிலர்‌, சுரங்க உரிமத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்‌ அளித்ததாக, விஷமத்தனமான வதந்திகளை பரப்பி வருகின்றனர்‌.

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் எதிர்க் கட்சிகள் விஷமத்தனமான வதந்தி பரப்புவது ஏன் என்றும் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும்தான் இரட்டை வேடம் போடுவதாகவும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்

மேலூர்‌ பகுதியில்‌ உள்ள கிராமங்களில்‌, டங்ஸ்டன்‌ சுரங்கப்‌ பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து 3.10.2023 நாளன்று மத்திய சுரங்கத்‌ துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்‌, தமிழ்நாடு அரசின்‌ எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன் என்று நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’மதுரை மாவட்டம்‌, மேலூர்‌ பகுதியில்‌ உள்ள கிராமங்களில்‌, டங்ஸ்டன் சுரங்கப்‌ பணிகளை மேற்கொள்வதற்காக, ஹிந்துஸ்தான்‌ சிங்க்‌ நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம்‌ அளித்துள்ளது. இந்த கிராமங்களில்‌ வாழக்கூடிய விவசாயிகளின்‌ வாழ்வாதரம்‌ இந்த சுரங்கப்‌ பணிகளால்‌ பாதிக்கப்படும்‌ என்பதால்‌, இந்தப்‌ பகுதி மக்கள்‌ இதை எதிர்த்து போராட்டங்களை மேற்கொண்டனர்‌.

இந்த நிலையில்‌, மேலூர்‌ பகுதி மக்களின்‌ வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த சுரங்கப்‌ பணிகளுக்கும்‌ தமிழ்நாடு அரசு எப்போதும்‌ அனுமதி அளிக்காது என்று உறுதியளித்து, இந்துஸ்தான்‌ சிங்க்‌ நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்‌ என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ கடிதம்‌ எழுதியுள்ளார்‌. இதனை ஏற்று, போராட்டத்தில்‌ ஈடுபட்டு வந்த அப்பகுதி மக்களும்‌ தமது போராட்டத்தை விலக்கிக்‌ கொண்டுள்ளனர்‌.

விஷமத்தனமான வதந்தி

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ இந்த உறுதியான நடவடிக்கையை மக்கள்‌ ஏற்றுக்‌ கொண்டுள்ளதை சகிக்க முடியாத சிலர்‌, ஒன்றிய அரசின்‌ இந்த சுரங்க உரிமத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்‌ அளித்ததாக, விஷமத்தனமான வதந்திகளை பரப்பி வருகின்றனர்‌. மேலும்‌, இந்த உரிமத்தை வழங்குவதற்கு முன்பாக மாநில அரசின்‌ கருத்துக்களைப்‌ பெற்றதாக ஒன்றிய அரசும்‌ தவறான தகவலை தெதரிவித்துள்ளது. இது குறித்த உண்மை நிலையை விளக்கிட விரும்புகின்றேன்‌.

கடந்த 2023-ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதத்தில்‌, முக்கிய கனிம வளங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிமக் கொள்கையில்‌ மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு தெரிவித்த உடனேயே, 3.10.2023 நாளன்று, ஒன்றிய சுரங்கத்‌ துறை அமைச்சருக்கு நான்‌ எழுதிய கடிதத்தில்‌, தமிழ்நாடு அரசின்‌ எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன்‌. ஆனால்‌, 22.11.2023 அன்று மாண்புமிகு ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர்‌ இதற்கு அளித்த பதிலில்‌, உரிய சட்டத்‌ திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இந்த ஏலம்‌ விடப்படுவதாகவும்‌, தேசிய அளவிலான தேவைகளை கருத்தில்‌ கொண்டு மாநில அரசுகள்‌ இந்த கொள்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்‌ என்றும்‌ குறிப்பிட்டு நமது எதிர்ப்புகளை நிராகரித்தார்‌.

இவை எவற்றையுமே கருத்தில்‌ கொள்ளாத ஒன்றிய அரசு

இதனைத்‌ தொடர்ந்து மதுரை மேலூர்‌ பகுதியில்‌ உள்ள நிலங்களைப்‌ பற்றிய விவரங்கள்‌ ஒன்றிய அரசால்‌ கேட்கப்பட்ட போதும்‌, உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில்‌ உள்ள அரிட்டாபட்டி பகுதியானது ஒரு பல்லுயிர்‌ பெருக்க வரலாற்றுத்‌ தலம்‌ என்பதை சுட்டிக்காட்டினோம்‌. இவை எவற்றையுமே கருத்தில்‌ கொள்ளாத ஒன்றிய அரசு ஏலம்‌ விட்டு டங்ஸ்டன்‌ உரிமத்தை மேற்கூறிய நிறுவனத்திற்கு அளித்தது.

இன்று மக்களுடைய எதிர்ப்பையும்‌ தமிழ்நாடு முதலமைச்சரின்‌ உறுதியான நிலைப்பாட்டினையும்‌ கண்டு மிரண்டு, ஒன்றிய அரசும்‌, அதனோடு சேர்ந்து இரட்டை வேடம்‌ போடக்கூடிய எதிர்க் கட்‌சிகளும்‌, மக்களின்‌ கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த சுரங்க ஏலத்துக்கு தமிழ்நாடு அரசு தனது ஒப்புதலை தெரிவித்ததாக பொய்ச்‌ செய்திகளை பரப்பி வருகின்றன. இவை எதையும்‌ மக்கள்‌ நம்பத்‌ தயாராக இல்லை என்பதே உண்மை’’.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
Musk Targets Trump: “நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
“நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
Embed widget