![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
அயலகத் தமிழறிஞர்களுக்கான உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் - உலகத்தமிழ்ச்சங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
2022ஆம் ஆண்டிற்கு அயலகத் தமிழறிஞர்களுக்கான உலகத் தமிழ்ச் சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
![அயலகத் தமிழறிஞர்களுக்கான உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் - உலகத்தமிழ்ச்சங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் applications open for World Tamil Association Awards for Neighboring Tamil Scholars and CRPF person missing case அயலகத் தமிழறிஞர்களுக்கான உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் - உலகத்தமிழ்ச்சங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/20/b7e00edf2e13539fcb9ec8a75567705f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
CRPF வீரர்களை வேறு மாநிலத்தில் பணியமர்த்தும் பொழுது அவர்களுக்கான முழு பொறுப்பும் மத்திய அரசினுடையது தான் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
ராமநாதபுரம் மாவட்டம், முமுதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் பாலமுருகன் CRPF 19ஆம் பட்டாலியனில் பணியாற்றி வந்த நிலையில், இரண்டாம் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இரவு சத்திஸ்கர் சென்று அடைந்ததாக போனில் தெரிவித்தார். தினமும் எங்களைத் தொடர்பு கொண்டு பேசும் நிலையில், கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி எனது கணவர் பணி செய்யும் இடத்தில் இருந்து என்னை அழைத்து, காலை முதல் கேம்பில் எனது கணவரை காணவில்லை என தெரிவித்தனர்.
எனது கணவர் காணாமல் போன நிலையில் 2 குழந்தைகளுடன் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் மாவோயிஸ்டுகள் நடமாடும் பகுதி என்பதால், எனது கணவர் அவர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஆகவே எனது கணவரை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மத்திய அரசு CRPF வீரர்களை வேறு மாநிலத்தில் பணியமர்த்தும் பொழுது அவர்களுக்கான முழு பொறுப்பும் மத்திய அரசினுடையது தான். அதனை மத்திய அரசு தட்டிக் கழிக்க இயலாது என கூறி. சபரி ஆற்றங்கரை பகுதியில் அடையாளம் தெரியாத உடல்கள் ஏதேனும் இருப்பின் அதனை காணாமல் போன CRPF வீரரின் அங்க அடையாளங்களோடு ஒப்பிட்டு பார்த்து கண்டறியும் படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையில் ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)