மேலும் அறிய

ADMK: 'ஸ்டெர்லைட் விவகார கருத்து.. இது ஆளுநர் பதவிக்கு அழகல்ல' ஆர்.என்.ரவிக்கு எதிராக களமிறங்கிய அ.தி.மு.க...!

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக அ.தி.மு.க. கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை கருத்து தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, மாநில அரசு எடுக்கும் நிலைபாட்டுக்கு நேர் எதிரான கருத்தை தெரிவித்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆன்லைன் ரம்மி மசோதா தொடங்கி தமிழ்நாடு பெயர் விவகாரம் வரை தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் வெடித்தது.  இதற்கிடையே, குடிமைப்பணிகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடனான சந்திப்பின்போது ஆளுநர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

ஆளுநர் ரவிக்கு எதிராக களமிறங்கிய அதிமுக:

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக, உணர்வுகள் காரணமாக கடந்த அதிமுக அரசு மூடியது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் வந்தது என ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவர் பொதுவெளியில் கருத்துகள் சொல்வது அவருக்கு அழகு அல்ல.

மேலும் பிரதமர் மோடி தமது கடுமையான உழைப்பால் மக்களைக் காக்கும் தலைவராக உயர்ந்துள்ளார். அவரது காலகட்டத்தில் அந்நிய பணம் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கமாட்டார். அப்படி வந்தால் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைப்பார். பிரதமர் மோடி நமது நாட்டின் ஆகச் சிறந்த பிரதமர்" என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்போதைய அ.தி.மு.க. அரசிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை கடந்தாண்டு வெளியிடப்பட்டது.

அதில், போராட்டத்தை தவறாக கையாண்டதாக அப்போதைய தமிழ்நாடு அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல, துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அனைவரின் மீது குற்ற நடவடிக்கையும் துறைசார் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 13 பேரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து பேசிய ஆளுநர் ஆர். என். ரவி, "நாட்டின் சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை மாற்றம் என பல்வேறு காரணிகளை வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதிகள் போராட்டம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி வரையில் இதுபோன்ற நிதிகள் பயன்படுத்ப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் விளிஞ்சம் துறைமுகம் கொண்டு வரும்போதும் கூடங்குளம் அணு உலை வரும் போதும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மக்களை தூண்டவும் இதுபோன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்த கருத்துக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக மோதல் போக்கை கடைபிடிக்கும் பெரும்பாலான விவகாரங்களில் ஆளுநருக்கு ஆதரவாக அதிமுக கருத்து தெரிவித்து வந்தது. ஆனால், தற்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக அதிமுக கருத்து தெரிவித்துள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget