மேலும் அறிய

MP Ravindranath: 'எடை'யில்லா 'பாடி'க்கு விடை கொடுக்கும் நேரம்... ஓ.பி.ரவீந்திரநாத் தாக்கு..!

அதிமுகவில் எம்பி ரவீந்திரநாத்தை நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதிமுகவில் நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிரச்னை காரணமாக பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இதன்காரணமாக ஈபிஎஸ் தரப்பு சிலரையும், ஒபிஎஸ் தரப்பு சிலரையும் மாறி மாறி கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர். அந்தவகையில் நேற்று எடப்பாடி பழனிசாமி சார்பில் எம்.பி.ரவீந்திரநாத், அவருடைய சகோதரர் ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் எம்பி ரவீந்திரநாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “இரட்டை இலையை அங்கீகரித்த ஒரே ஒரு வெற்றி.. அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி… கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி  “அம்மா” அவர்கள் எனக்கு கொடுத்த வரம்.. அதை நீக்கவும்.. ஒதுக்கவும் .. எடுக்கவும்.. கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்… கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகு தூரம் !!

பதவி கொடுத்தவர்களுக்கே.. பாதகம் விளைவித்த இடையில் வந்த ‘எடை’யில்லா  ‘பாடி’க்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்!! ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே ஒன்றிணைவோம்… ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்…” எனப் பதிவிட்டுள்ளார்.

அதிமுக அலுவலகம் சீல் வழக்கு:

மிகுந்த பரபரப்புக்கிடையே, கடந்த 11 ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு இராண்டாவதாக கூடிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டி இருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது.

இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம் சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது. இந்த நிலையில் அதிமுகவின் அலுவலத்தின் சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கானது இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பும் காரசார விவாதம் நடத்திய நிலையில், இறுதியில் பேசிய நீதிபதி பொதுக்குழு அன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரமாக சமர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை இன்று ஒத்தி வைத்து இருக்கிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஜூலை 16 முக்கிய அறிவிப்பு: நாளை இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது! முழு லிஸ்ட் இதோ!
ஜூலை 16 முக்கிய அறிவிப்பு: நாளை இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது! முழு லிஸ்ட் இதோ!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
நான் தெலுங்கனா? .. தமிழ் தேசியம் பேசினாலே பிடிக்காதா?.. சீமானை மறைமுகமாக சாடிய திருமாவளவன்!
நான் தெலுங்கனா? .. தமிழ் தேசியம் பேசினாலே பிடிக்காதா?.. சீமானை மறைமுகமாக சாடிய திருமாவளவன்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget