மேலும் அறிய

AIADMK: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; வேட்பு மனுதாக்கல் நிறைவு; போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி பழனிச்சாமி..?

AIADMK General Secretary Election: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (மார்ச் 19) மதியம் 3 மணிக்கு முடிவடைந்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (மார்ச் 19) மதியம் 3 மணிக்கு முடிவடைந்துள்ளது. 

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வுக்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்  செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிச்சாமி தேர்வாகவுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர் தான் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளாதால், போட்டியின்றி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளார் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. 

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செலவம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில், தேர்தலை நடத்தலாம் என்றும் ஆனால் முடிவை அறிவிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசமி இருதரப்பினர் நீதிமன்றத்தில் வைத்த வாதங்கள் இதோ.,

ஓபிஎஸ் தரப்பு வாதம்:


AIADMK: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; வேட்பு மனுதாக்கல் நிறைவு; போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி பழனிச்சாமி..?

ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவியை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. 

வெள்ளிக்கிழமை அட்டவணை வெளியிட்டு, ஞாயிறன்று  வேட்புமனுத்தாக்கல் நிறைவு என அவசரம் காட்டியுள்ளனர். பொதுச் செயலாளர் பதவிக்கு சாதாரண உறுப்பினர்கள் போட்டியிட முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர்.

மேலும்,  இன்றுடன் வேட்புமனுதாக்கல் நிறைவு என, இன்று மாலையே பொதுச்செயலாளர் அறிவிக்கப்படலாம். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்  என ஒபிஎஸ் தரப்பினர் வாதம் வைத்தனர்.

இபிஎஸ் தரப்பு வாதம்:


AIADMK: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; வேட்பு மனுதாக்கல் நிறைவு; போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி பழனிச்சாமி..?

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் வழக்கு தொடர உரிமையில்லை எனவும், ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக வழக்கை தொடரவில்லை. 1.5 கோடி தொண்டர்களில் 1 சதவீதம் கூட ஓபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. அ.தி.மு.க.வின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செயல்படுவதாகவும், அதிமுகவின் எதிர்காலத்தை கருதியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறும் ஓபிஎஸ், தேர்தலை தடுக்க நினைப்பது ஏன்? கட்சிக்கு விதிராக நீதிமன்றங்கள் சென்றால் பதவி பறிக்கப்படும் என விதிகள் உள்ளன என உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது.

ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஏன் கொண்டு வரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பன்னீர்செல்வம்  தரப்பினர் தெரிவிக்கவில்லை. சூழ்நிலைகள் கருதி சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இபிஎஸ் தரப்பினர் வாதங்களை வைத்தனர்.

நீதிமன்றம் தரப்பு:


AIADMK: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; வேட்பு மனுதாக்கல் நிறைவு; போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி பழனிச்சாமி..?

இவ்வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். அப்போது, பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவேண்டிய அவசியம் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் முடிவை அறிவிக்க வேண்டாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். 

மேலும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 11-க்கு பதிலாக முன்கூட்டியே மார்ச் 22-ம் தேதியை விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பை அதையடுத்து மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், இத்தீர்ப்பை இரு தரப்பினரும் தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதாக கூறி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Siddaramaiah Vs DKS: கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் ‘வார்த்தை‘ ஜாலம்; பதிலுக்கு பதில்; சித்தராமையா, சிவகுமாரின் பதிவுகள்
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Embed widget