Jayakumar Bail Dismissed: ஜெயக்குமார் மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி முறையிட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகிவிட்டதால் ஜெயக்குமார் மனு வரும் வியாழக்கிழமை பட்டியலிடப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி முறையிட்டுள்ளார்.
திமுக தொண்டரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் ஜெயக்குமார் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

