மேலும் அறிய

”வருங்கால பிரதமர் எடப்பாடி பழனிசாமி.. அத்தனை தகுதியும் உண்டு” - அதிமுக எம்.பி., தம்பிதுரை பேட்டி!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிபெறும் என்று அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் அதிமுக எம்பி தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று தமிழகத்தில் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதற்காக கிருஷ்ணரி மாவட்டத்தில் பயிற்சி மையங்கள் அமைத்து நம்முடைய பகுதி மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்திட இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது. நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்பேரில், இங்கு இன்று காலை அடிக்கல் நாட்டினோம்.” என்றார். 

அப்போது செய்தியாளர்கள் நேற்று வேலூரில் அமித்ஷா, தமிழர்களை பிரதமராக்குவோம் என்று சொன்னாரே? அதற்கு உங்களின் கருத்துகள் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, “ இது தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒரு பெருமை ஆகும். சுதந்திரத்திற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தமிழர்கள் போராடியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும். ராஜாஜி போன்றவர்கள் எல்லாம் பெரிய அறிஞர்கள். அவரே ஒரு காலத்தில் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த காலத்தில் ராஜாஜிக்கு கிடைக்காமல் நேருவுக்கு கிடைத்தது. 

அதேபோல், காமராஜர் அவர்களுக்கு பாரத பிரதமர் ஆவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை வேண்டாம் என்று மறுத்து விட்டார். மூப்பனாருக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு காரணம் திராவிட கழகம்தான் என்று அமித்ஷா சொல்லி இருக்கின்றார். அதோடு அவர் பேட்டி கொடுக்கும்போது வருங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வருவார் என்பதே பாஜகவின் கொள்கை என்று சொல்லி இருக்கிறார். 

நாங்கள் இப்போது பாஜகவுடன் கூட்டணி இருக்கின்றோம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காகதான். ஜெயலலிதா இருந்தேபோதே பிரதமர் ஆவதற்கான அறிகுறிகள் உருவாக்கின. ஆனால், காலத்தின் கட்டாயம் மாறிவிட்டது. 

தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கீழ் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. புரட்சி தலைவர் காலத்தில் இருந்தே தமிழகத்தில் இருந்து ஒருவரை பிரமராக்க வேண்டும் என்று. அமித்ஷா அவர்கள் நேற்று பேசும்போது அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பிரதமர் மோடிதான். இதற்கு அதிமுகவோ, எடப்பாடி பழனிசாமியோ மறுப்பு தெரிவிக்கவில்லை. தொடர்ந்து கூட்டணி இருந்து ஆதரவு கொடுக்கிறோம் என்றே குறிப்பிட்டார். 

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றிபெறும். அமித்ஷா தமிழரை பிரதமராக்குவோம் என்று சொன்னதை வரவேற்கிறோம். அது எந்த தேர்தலில் நடக்கும் என்று தெரியாது. ஆனால், அப்படி நடந்தால் அதற்கு தகுதியானவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். 90 களில் என்னுடன் நின்று பணியாற்றி இருக்கிறார். அவருக்கு நாடாளுமன்ற அனுபவமும் உண்டு. பல்வேறு தேர்தல்களை முன்நின்று நடத்தி இருக்கிறார். நான்கு ஆண்டு காலம் தமிழகத்தையும், அதிமுகவை காப்பாற்றியவர். அவருக்கு அத்தனை தகுதியும் இருக்கிறது. ” என தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget