மேலும் அறிய

Supreme Court: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யும் உத்தரவு ரத்து; உச்சநீதிமன்றம் அதிரடி - வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

ஏடிஜிபி ஜெயராம் வழக்கில் அதிரடி காட்டியுள்ள உச்சநீதிமன்றம், அவரை கைது செய்யும் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் கடத்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிற்பித்த கைது உத்தரவை ரத்து செய்து அதிரடி காட்டியுள்ள உச்சநீதிமன்றம், வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு என்ன.?

திருவள்ளூரில், காதல் விவகாரம் ஒன்றில், சிறுவன் ஒருவனை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்தது தமிழ்நாடு அரசு.

இந்நிலையில், ஏடிஜிபி ஜெயராமன், தனது கைது மற்றும் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் பூயன், மன்மோகன் ஆகியோர் அங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நிதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை அதிரடியாக நீதிபதிகள் ரத்து செய்தனர். அதேபோல், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல், வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்விற்கு மாற்றவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட அரசின் உத்தரவை வேறு வழக்கின் மூலம் ஏடிஜிபி ஜெயராம் சந்திக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் பூயன், மன்மோகன் ஆகியோர் அங்கிய அமர்வு இந்த அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னணி

திருவள்ளூரில், காதல் விவகாரத்தில் பெற்றோரை மிரட்டுவதற்காக, கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்தியோடு கூட்டு சேர்ந்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை தன்னுடைய அரசு காரை பயன்படுத்தி கடத்திய வழக்கில்தான் வசமாக சிக்கியிருக்கிறார் ஏடிஜிபி ஜெயராமன். சாதாரண ஒரு போலீஸ் மீது புகாரோ, குற்றச்சாட்டுகளோ வந்தால் கூட, போலீஸ் என்பதால் அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வழக்கம் புரையோடிப்போயிருக்கும் சூழலில், உயர் அதிகாரியான ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டு அதிரடி காட்டினார், உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஏடிஜிபி-யான ஜெயராமனை நீதிமன்றத்தில் வைத்தே காவல் சீருடையில் அவர் இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தனது கைது மற்றும் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டி, அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தெரிவித்தது என்ன.?

முன்னதாக, ஏற்கனவே நேற்றைய விசாரணையின்போது, பயிணிடை நீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை இந்த வழக்கின் விசாரணை உச்சநிதிமன்றத்தில் நடைபெற்றபோது, சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், ஜெயராமனின் பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற முடியாது என்றும், விசாரணை முடியும் வரை அவர் இடைநீக்கத்தில் தான் இருக்க வேண்டும் என்று விதிகள் சொல்வதாகவும் அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக அவர் இடைநீக்கம் செய்யப்படவில்லை என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில்தான், இன்றைய விசாரணை முடிந்து, உச்சநிதிமன்ற நீதிபதிகள் மேற்கண்ட அதிரடி உத்தரவுகளை வழங்கியுள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Embed widget