மேலும் அறிய

Sivakarthikeyan: “சினிமா கைவிட்டுட்டா, பிழைக்கறதுக்கு என் கிட்ட 2 விஷயம் இருக்கு“ - சிவகார்த்திகேயன் கூறியது என்ன.?

சென்னையில் இன்று நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு‘ நிகழ்வில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், சினிமா கைவிட்டுவிட்டால் கூட, தான் பிழைத்துக் கொள்வதற்கு 2 விஷயங்கள் இருப்பதாக கூறினார். அது என்ன தெரியுமா.?

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழவில் க்லந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், சினிமா தன்னை கைவிட்டுவிட்டால் கூட, தான் பிழைத்துக்கொள்வதற்கு இரண்டு டிகிரி வைத்திருப்பதாக தெரிவித்தார். அவர் பேசியதன் முழு விவரத்தை தற்போது பார்க்கலாம்.

“மாணவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷனாக மாறிவிட்டனர்“

விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இந்த நிகழ்வையும், அரசின் திட்டங்களையும் வாழ்த்தவே நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், ஆனால், மேடையில் மாணவர்கள் கூறிய கதைகளை தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாணவர்கள் கூறிய ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டுவிட்டு திரும்பி செல்லும்போது, இன்னும் சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுவதாகவும் அவர் கூறினார்.

அரசு இவ்வளவு திட்டங்களை செயல்படுத்துவது எவ்வளவு நல்ல விஷயமோ, அதைவிட சிறப்பான விஷயமாக, மாணவர்கள் எப்படியாவது படித்து முன்னேறிவிட வேண்டும் என்று நினைப்பதை தான் பார்ப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

உலகில் எதையெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதைவிட சிறந்த செல்வம் கல்வி என்பதை விளக்கும் திருக்குறளையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

“ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால், அடுத்தடுத்த தலைமுறை நன்றாக இருக்கும்“

மாணவர்கள் சாப்பிடுவதற்கும், பள்ளிக்கு செல்வதற்கும் கஷ்டப்பட்ட கதைகளை கூறிய நிலையில், தன் சொந்த அனுபவத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன், தனது தந்தை ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்று வந்ததால், தான் 3 வேளையும் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றதாகவும், தனது தந்தை நடந்தே பள்ளிக்கு சென்றதால், தான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ட்ரெய்ன் போன்றவற்றில் பள்ளிக்கு சென்றுவந்ததாக தெரிவித்தார்.

இதன்மூலம், ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால், அதற்கு அடுத்த தலைமுறை நன்றாக இருக்கும் என்பதை தனது குடும்பத்திலேயே பார்த்ததாக அவர் தெரிவித்தார். மேலும், தனது தந்தைக்கு இருந்த வசதியின் மூலம் அவர் ஒரு டிகிரியை மட்டுமே வாங்க முடிந்ததாகவும், அவர் ஒரு டிகிரி வாங்கி முன்னேறியதால், தன்னை 2 டிகிரி படிக்க வைத்ததாகவும், தனது சகோதரியை 3 டிகிரி படிக்க வைத்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

“சினிமா கைவிட்டால் நான் பிழைத்துக்கொள்ள 2 டிகிரிக்கள் இருக்கின்றன“

தான் பி.இ மற்றும் எம்.பி.ஏ படித்துள்ளதாக தெரிவித்த சிவகார்த்திகேயன், “நான் படித்ததற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லை என்று நீங்கள் கேட்கலாம், ஆனால், இப்போது நான் நடித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு இருக்கும் ஒரு நம்பிக்கை எனது 2 டிகிரிக்கள்தான்“ என தெரிவித்தார்.

சினிமாத் துறை என்பது சவாலான துறை. அதிலும், எந்த பின்னணியும் இல்லாமல் இந்த துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம் என குறிப்பிட்ட அவர், அப்படி இந்த துறையில் சவால் வரும்போதெல்லாம், தனக்கு இருக்கும் ஒரே தைரியம், ஒருவேளை திரைத்துறை என்னை அனுப்பிவிட்டால், அந்த 2 டிகிரிக்களை வைத்து, ஏதேனும் ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்பதுதான் என மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார்.

“மார்க்குக்காகவும் படிங்க, வாழ்க்கைக்கு தேவையானதையும் படிங்க“

இறுதியாக மாணவர்களுக்கு அறிவுரை கூறிய சிவகார்த்திகேயன், மதிப்பெண் வாங்குவதற்காக படிக்கும் அதே வேளையில், வாழ்க்கைக்கு தேவையானதையும் படியுங்கள் என அறிவுரை வழங்கினார். அப்போது தான், அந்த படிப்பை வைத்து நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் அனைத்தையும் பெற முடியும் என சிவகார்த்திகேயன் கூறினார்.

மேலும், படிப்பை தாண்டி எல்லோராலும் ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய முடியும், அதை செய்யுங்கள், என்னாலேயே முடியும் போது, உங்களாலும் முடியும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார் சிவகார்த்திகேயன்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Sengottaiyan joined TVK: ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை!  தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை! தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
Embed widget