மேலும் அறிய

Annamalai: தமிழை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்? அண்ணாமலை விளக்கம்

ABP Southern Rising Summit 2025: தமிழ் மொழியை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்? என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

ABP Southern Rising Summit 2025: ஏபிபி குழுமம் நடத்திய ABP Southern Rising Summit நிகழ்ச்சியில் இன்று தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது, அவர் தமிழ் மொழிக்கும், சமஸ்கிருதம் மொழிக்கும் இடையேயான நிதி ஒதுக்கீடு குறித்து பேசினார்.

மொழி நிதி ஒதுக்கீடு:

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு நடந்து வருகிறது. மத்திய அரசு சமஸ்கிருதம் மற்றும் இந்தி தவிர மற்ற மொழிகள் மீது பாரபட்சம் காட்டுவதாக தொடர் விமர்சனங்கள் உள்ளது. குறிப்பாக, தமிழ் மொழி உள்பட தென்னிந்திய மொழிகள் வளர்ச்சிக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. 

அண்ணாமலை பேசியதாவது, இந்த தலைமுறை பல மொழிகளை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். 5ம் வகுப்பு வரை நான் தமிழ் மொழியில்தான் படித்தேன்.

அதிக நிதி ஏன்?

பிரதமர் எப்போது தமிழ்நாட்டில் பேசினாலும் தமிழில் 3 வரி பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் தமிழுக்கு குறைந்த நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு மொழிகளை ஊக்குவிப்பதற்காகவும், விளம்பரப்படுத்துவதற்காகவும் ஒதுக்குகிறது. இது பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. 

சமஸ்கிருதம் மொழிகளுக்காக 18 பல்கலைக்கழகங்கள் உள்ளது. தமிழ் மொழிக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது. அதுவும் 1981ம் ஆண்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. சமஸ்கிருதம் மொழிக்கு 16 பல்கலைக்கழகங்கள் மோடி ஆட்சிக்கு  வருவதற்கு முன்பே தொடங்கப்பட்டது. மோடி ஆட்சியில் 2 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டது. சமஸ்கிருத பல்கலைக்கழகம் அதிகளவில் உள்ளதால் அதிக பணம் ஒதுக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

மற்ற மொழிகளுக்கு நிதி எப்படி?

பிரதமர் மோடி ஆட்சியில் சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 2 ஆயிரத்து 532 கோடியோ 59 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கு ரூபாய் 147.56 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர். 

ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 230.24 கோடி சமஸ்கிருதம் மொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 5 மொழிகளுக்கும் சேர்த்து ரூபாய் 13.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீதம் கூட மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்படவில்லை. 

மேலும், இந்தி, உருது மற்றும் சிந்தி ஆகிய மொழிகளுக்கு கடந்த பிரதமர் மோடியின் ஆட்சியில் ரூபாய் 1317.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உருது மொழிக்கு மட்டும் 837.94 கோடி ரூபாயும், இந்திக்கு ரூபாய் 426.99 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget