மேலும் அறிய

Annamalai: தமிழை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்? அண்ணாமலை விளக்கம்

ABP Southern Rising Summit 2025: தமிழ் மொழியை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்? என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

ABP Southern Rising Summit 2025: ஏபிபி குழுமம் நடத்திய ABP Southern Rising Summit நிகழ்ச்சியில் இன்று தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது, அவர் தமிழ் மொழிக்கும், சமஸ்கிருதம் மொழிக்கும் இடையேயான நிதி ஒதுக்கீடு குறித்து பேசினார்.

மொழி நிதி ஒதுக்கீடு:

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு நடந்து வருகிறது. மத்திய அரசு சமஸ்கிருதம் மற்றும் இந்தி தவிர மற்ற மொழிகள் மீது பாரபட்சம் காட்டுவதாக தொடர் விமர்சனங்கள் உள்ளது. குறிப்பாக, தமிழ் மொழி உள்பட தென்னிந்திய மொழிகள் வளர்ச்சிக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. 

அண்ணாமலை பேசியதாவது, இந்த தலைமுறை பல மொழிகளை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். 5ம் வகுப்பு வரை நான் தமிழ் மொழியில்தான் படித்தேன்.

அதிக நிதி ஏன்?

பிரதமர் எப்போது தமிழ்நாட்டில் பேசினாலும் தமிழில் 3 வரி பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் தமிழுக்கு குறைந்த நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு மொழிகளை ஊக்குவிப்பதற்காகவும், விளம்பரப்படுத்துவதற்காகவும் ஒதுக்குகிறது. இது பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. 

சமஸ்கிருதம் மொழிகளுக்காக 18 பல்கலைக்கழகங்கள் உள்ளது. தமிழ் மொழிக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது. அதுவும் 1981ம் ஆண்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. சமஸ்கிருதம் மொழிக்கு 16 பல்கலைக்கழகங்கள் மோடி ஆட்சிக்கு  வருவதற்கு முன்பே தொடங்கப்பட்டது. மோடி ஆட்சியில் 2 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டது. சமஸ்கிருத பல்கலைக்கழகம் அதிகளவில் உள்ளதால் அதிக பணம் ஒதுக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

மற்ற மொழிகளுக்கு நிதி எப்படி?

பிரதமர் மோடி ஆட்சியில் சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 2 ஆயிரத்து 532 கோடியோ 59 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கு ரூபாய் 147.56 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர். 

ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 230.24 கோடி சமஸ்கிருதம் மொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 5 மொழிகளுக்கும் சேர்த்து ரூபாய் 13.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீதம் கூட மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்படவில்லை. 

மேலும், இந்தி, உருது மற்றும் சிந்தி ஆகிய மொழிகளுக்கு கடந்த பிரதமர் மோடியின் ஆட்சியில் ரூபாய் 1317.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உருது மொழிக்கு மட்டும் 837.94 கோடி ரூபாயும், இந்திக்கு ரூபாய் 426.99 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
மறைக்கப்பட்ட வரிவிதிப்பு ரகசியம்... ஆஹா, சிவகங்கையில் 3ம் வீரபாண்டியன் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
மறைக்கப்பட்ட வரிவிதிப்பு ரகசியம்... ஆஹா, சிவகங்கையில் 3ம் வீரபாண்டியன் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
Puducherry power cut : பொதுமக்களே உஷார்..! புதுவையில் நாளை பல இடங்களில் மின்தடை: பகுதிகள் விவரம் உள்ளே!
Puducherry power cut : பொதுமக்களே உஷார்..! புதுவையில் நாளை பல இடங்களில் மின்தடை: பகுதிகள் விவரம் உள்ளே!
இது என்ன புது ட்ரெண்ட்? - முதல்வர் விஜய் படம் மாட்டியதால் நெல்லை மேயர் செய்த விநோத செயல் - வைரலாகும் புகைப்படம்
இது என்ன புது ட்ரெண்ட்? - முதல்வர் விஜய் படம் மாட்டியதால் நெல்லை மேயர் செய்த விநோத செயல் - வைரலாகும் புகைப்படம்

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Ultraviolette Bike Offer: உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
உங்க பழைய பைக்க கொண்டு வாங்க, புது EV பைக்க எடுத்துட்டு போங்க.! அல்ட்ராவயலெட்டின் சூப்பர் ஆஃபர்.!
Longest Range EVs: ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Embed widget