மேலும் அறிய

ABP NADU IMPACT: ஏபிபி நாடு செய்தி எதிரொலி: சேதமடைந்த மூங்கில் பாலத்திற்கு விடிவுகாலம் - கட்டப்பட்ட புதிய பாலம்.. !

பள்ளி மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து சென்றுவந்த சேதமடைந்த மூங்கில் பாலம் குறித்து 'ஏபிபி நாடு' செய்தித்தளத்தில் செய்தி வெளியானதை தொடர்ந்து, புதிய மூங்கில் பாலம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளி மாணவர்களின் உயிரைப் பணயம் வைத்து சென்றுவந்த சேதமடைந்த மூங்கில் பாலம் குறித்து 'ஏபிபி நாடு' செய்தித்தளத்தில் செய்தி வெளியானதை தொடர்ந்து, செய்தியின் எதிரொலியாக, மாவட்ட நிர்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தற்காலிகமாகப் புதிய மூங்கில் பாலம் அமைத்துக் கொடுக்கப்பட்டதோடு, நிரந்தர கான்கிரீட் பாலம் கட்ட அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (Proposal) அனுப்பப்பட்டுள்ளது.

ஏபிபி நாடு செய்தியும் மக்களின் குமுறலும்

சீர்காழி ஒன்றியம், மாத்தாம்பட்டினம் கிராமத்திலிருந்து கோணயாம்பட்டினம் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், முல்லையாற்றைக் கடக்க முறையான பாலம் இன்றி சேதமடைந்த மூங்கில் பாலத்தைப் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி ஒருவர் ஆற்றில் விழுந்து காயமடைந்த சம்பவத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வரும் மக்களின் 77 கால கோரிக்கையையும் 'ஏபிபி நாடு' தளம் ஆதாரங்களுடன் செய்தியாக வெளியிட்டிருந்தது.

 

இந்தச் செய்தி சமூக வலைதளங்களிலும், அரசு வட்டாரங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. "கல்வி கற்கச் செல்லும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லையா?" என்ற கேள்வியையும், கிராம மக்களின் கண்ணீர் மல்கிய கோரிக்கையையும் அதிகாரிகளின் கவனத்திற்கு இச்செய்தி கொண்டு சென்றது.

மாவட்ட நிர்வாகத்தின் உடனடி ஆக்ஷன்

செய்தியின் தீவிரத்தை உணர்ந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் சீர்காழி வருவாய்த் துறையினர் உடனடியாகப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

* தற்காலிகத் தீர்வு: சேதமடைந்திருந்த பழைய ஆபத்தான பாலத்திற்குப் பதிலாக, உடனடியாகப் பலமான புதிய மூங்கில் மரங்களைக் கொண்டு தற்காலிகப் பாலம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இது தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உடனடி போக்குவரத்திற்குப் பாதுகாப்பாக அமைந்துள்ளது.

* நிரந்தரத் தீர்வுக்கான கருத்துரு: வெறும் தற்காலிக நடவடிக்கையோடு நிறுத்திக் கொள்ளாமல், இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைக்க, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் அரசுக்கு அதிகாரப்பூர்வமான கருத்துரு (Proposal) அனுப்பப்பட்டுள்ளது.

கிராம மக்கள் நெகிழ்ச்சி

இது குறித்து மாத்தாம்பட்டினம் கிராம மக்கள் கூறுகையில், "எங்கள் கஷ்டத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திற்குப் பெரிய நன்றிகள். பாலம் உடைந்த நிலையில் அச்சத்துடன் இருந்த எங்களுக்கு, செய்தி வெளியான சில நாட்களிலேயே அதிகாரிகள் வந்து புதிய தற்காலிகப் பாலம் அமைத்துக் கொடுத்தது நிம்மதி அளிக்கிறது. இப்போது நிரந்தரப் பாலத்திற்கும் அரசுக்குக் கோப்பு அனுப்பப்பட்டிருப்பது எங்கள் குழந்தைகளுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம்," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்களின் பார்வை

"ஊடகங்கள் மக்களின் உண்மையான பிரச்சனைகளை முன்னெடுக்கும்போது, அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாகச் செயல்படும் என்பதற்கு இது ஒரு சான்று. தற்காலிகப் பாலம் என்பது இடைக்கால ஆறுதல் மட்டுமே. அரசு உடனே நிதி ஒதுக்கீடு செய்து, கான்கிரீட் பாலம் கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும்," எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முடிவை நோக்கி...

சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களாகக் கனவாகவே இருந்த பாலம் கோரிக்கை, இப்போது நனவாகும் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக அரசு இந்தக் கருத்துருவை விரைந்து பரிசீலித்து, நிதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில், மாத்தாம்பட்டினம் - கோணயாம்பட்டினம் கிராம மாணவர்களின் 'மரணப் போராட்டம்' நிரந்தரமாக முடிவுக்கு வரும்.

மக்களின் குறைகளை அதிகாரிகளின் காதுகளுக்குக் கொண்டு சேர்த்த 'ஏபிபி நாடு' செய்தித்தளத்தின் முயற்சிக்கு இப்பகுதி மக்கள் தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Embed widget