![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
TN Weather Update: கொளுத்தும் வெயில்! 40 டிகிரி செல்சியசை நெருங்கும் வெப்பம் - 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
![TN Weather Update: கொளுத்தும் வெயில்! 40 டிகிரி செல்சியசை நெருங்கும் வெப்பம் - 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்! A few districts in Tamil Nadu have recorded temperatures of nearly 40 degrees Celsius in the last 24 hours TN Weather Update: கொளுத்தும் வெயில்! 40 டிகிரி செல்சியசை நெருங்கும் வெப்பம் - 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/31926f01115b378458e818f7a394caa11711612460185589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல் 29 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 2 ஆம் தேதி மற்றும் 3 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று முதல் 1 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 33.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)