மேலும் அறிய

பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சையில் பிரசவம் பார்த்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது இதனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் உள்ள களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், இவருடைய  மனைவி ராஜேஸ்வரி இவர் மூன்றடி உயரம் தான் இருப்பார். மரபணு கோளாறால் எலும்பு வளர்ச்சி குறைந்து குள்ளமாக பிறக்கும் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.  சக்திவேல் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரியை பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி சேர்த்தனர். அங்கு மயக்கிவியல் துறை தலைவர் பாலமுருகன், மருத்துவர் சரவணகுமார், பாலகிருஷ்ணன், ஆனந்த்ராஜ் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் ஜெயந்தி அருமை கண்ணு, நஸ் குரு, கலைவாணி, ராஜேஷ் ஆகியவர் கொண்ட மருத்துவக் குழுவினர் ராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.


பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்

அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் 

அதன்படி மருத்துவர்களின் கடின முயற்சியால் அறுவை சிகிச்சை மூலம் ராஜேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.  இந்த சவாலான முயற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குழுவினருக்கு கல்லூரி முதல்வர் அரிகிருஷ்ணன், கண்காணிப்பாளர் மாலதி குடியிருப்பு மருத்துவ அலுவலர் கதிர் ஆகியோர் பாராட்டினர்.

இது குறித்து மயக்கவியல் துறை தலைவர் பாலமுருகன் கூறுகையில், வளர்ச்சி குறைவான 3 அடி உயரம் உள்ள பெண் ராஜேஸ்வரி கர்ப்பம் அடைந்ததே  சவாலான செயல்தான். அவருக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பில்லை, அறுவை சிகிச்சை செய்வதும் மிகவும் கடினமான செயல் ஒன்றுதான்.


பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்

அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்பார்த்து  பெண்குழந்தை பிறப்பு  

இருப்பினும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தோம், ஆனாலும் அவருக்கு மயக்கம் மருந்து செலுத்துவதிலும் சிக்கல் ,வளர்ச்சி குன்றிய இவருக்கு மயக்கம் மருந்து செலுத்தினால் அவருடைய  உயிருக்கு ஆபத்து நேரிடும், அதனால் முதுகு எலும்பில் ஏபிடி யூரல் மூலமாக மயக்க மருந்தினை வயிற்றுப் பகுதிக்கு மட்டும் செலுத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டு எங்களது இந்த சவாலான முயற்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது. பிறந்த பெண்  குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர் என  இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் மூன்று அடி உயரமுள்ள பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
Embed widget