மேலும் அறிய

ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தவர்கள் 84% பேர் - Local Circle ஆய்வில் தகவல்

84 சதவீத மக்கள் ஊரடங்கை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளதாக லோக்கல் சர்க்கிள் அமைப்பு எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசதிய பொருட்களான காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் இயங்கி வருகிறது. இந்த சூழலில், லோக்கல் சர்க்ள் எனப்படும் அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் ஊரடங்கை தொடர வேண்டுமா?அல்லது  ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமா? என்று மக்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் மக்களிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 62 சதவீத ஆண்களிடமும், 38 சதவீத பெண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வரும் நிலையில், 54 சதவீத மக்கள் தமிழக அரசு ஊரடங்கை வரும் மே மாதம் 31-ஆம் தேதி வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடனே நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்கள் அனைத்து தமிழக அரசு அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களை இயங்க அனுமதித்து, வீட்டிற்கே பொருட்களை வந்து கொடுத்து செல்லும் முறையுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி  வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 11 சதவீத மக்கள் மட்டும் தமிழக அரசு ஊரடங்கை மே 15-ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை வழக்கம்போல இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவீத மக்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆய்வின் இறுதியில், தமிழகத்தில் 84 சதவீத மக்கள் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மின்னணு வணிக நிறுவனங்களையும், ஹோம் டெலிவரி செய்யும் பலசரக்கு கடைகளையும் நாள் முழுவதும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின்போது மக்கள் ஊரடங்கு காரணமாக மிகவும் அவதிப்பட்டனர்.அப்போது, வீட்டிற்கே வந்து பொருட்களை அளிக்கும் ஹோம் டெலிவரி முறை மிகவும் உதவிகரமாக இருந்தது. இதனால், தற்போதைய இரண்டாம் அலையிலும் பெரும்பாலான குடும்பங்கள் அருகில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு தொலைபேசி மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை கூறி, அதனை ஹோம் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.

இவர்களில் 48 சதவீத மக்கள் பலசரக்கு மற்றும் மருந்துகளை ஹோம் டெலிவரி மூலம் பெறுகின்றனர். 26 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி மூலம் அனைத்து பொருட்களையும் பெறுகிறோம் என்று கூறியுள்ளனர். 10 சதவீத மக்கள் எதுவும் கூறவில்லை. மொத்தமாக 74 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி முறை இந்த ஊரடங்கு தொடங்கியது முதல் ஹோம் டெலிவரியால் பயனடைந்ததாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ABP Premium

வீடியோ

ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Honda Activa vs Yamaha Fascino 125..! இரண்டு ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? விலை, மைலேஜ் எவ்வளவு?
Honda Activa vs Yamaha Fascino 125..! இரண்டு ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? விலை, மைலேஜ் எவ்வளவு?
Hero Splendor on EMI: ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
Embed widget