மேலும் அறிய

ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தவர்கள் 84% பேர் - Local Circle ஆய்வில் தகவல்

84 சதவீத மக்கள் ஊரடங்கை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளதாக லோக்கல் சர்க்கிள் அமைப்பு எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசதிய பொருட்களான காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் இயங்கி வருகிறது. இந்த சூழலில், லோக்கல் சர்க்ள் எனப்படும் அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் ஊரடங்கை தொடர வேண்டுமா?அல்லது  ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமா? என்று மக்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் மக்களிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 62 சதவீத ஆண்களிடமும், 38 சதவீத பெண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வரும் நிலையில், 54 சதவீத மக்கள் தமிழக அரசு ஊரடங்கை வரும் மே மாதம் 31-ஆம் தேதி வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடனே நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்கள் அனைத்து தமிழக அரசு அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களை இயங்க அனுமதித்து, வீட்டிற்கே பொருட்களை வந்து கொடுத்து செல்லும் முறையுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி  வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 11 சதவீத மக்கள் மட்டும் தமிழக அரசு ஊரடங்கை மே 15-ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை வழக்கம்போல இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவீத மக்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆய்வின் இறுதியில், தமிழகத்தில் 84 சதவீத மக்கள் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மின்னணு வணிக நிறுவனங்களையும், ஹோம் டெலிவரி செய்யும் பலசரக்கு கடைகளையும் நாள் முழுவதும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின்போது மக்கள் ஊரடங்கு காரணமாக மிகவும் அவதிப்பட்டனர்.அப்போது, வீட்டிற்கே வந்து பொருட்களை அளிக்கும் ஹோம் டெலிவரி முறை மிகவும் உதவிகரமாக இருந்தது. இதனால், தற்போதைய இரண்டாம் அலையிலும் பெரும்பாலான குடும்பங்கள் அருகில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு தொலைபேசி மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை கூறி, அதனை ஹோம் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.

இவர்களில் 48 சதவீத மக்கள் பலசரக்கு மற்றும் மருந்துகளை ஹோம் டெலிவரி மூலம் பெறுகின்றனர். 26 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி மூலம் அனைத்து பொருட்களையும் பெறுகிறோம் என்று கூறியுள்ளனர். 10 சதவீத மக்கள் எதுவும் கூறவில்லை. மொத்தமாக 74 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி முறை இந்த ஊரடங்கு தொடங்கியது முதல் ஹோம் டெலிவரியால் பயனடைந்ததாக கூறியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

நிமிடங்களில் மாறும் பேட்டரி... தடையில்லா பயணம்! - பியாஜியோ மின்சார ஆட்டோவின் மாஸ் என்ட்ரி!
நிமிடங்களில் மாறும் பேட்டரி... தடையில்லா பயணம்! - பியாஜியோ மின்சார ஆட்டோவின் மாஸ் என்ட்ரி!
இளைஞர்களே அலர்ட்! புதுச்சேரியில் அக்னிவீர் ராணுவ முகாம்! இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்...
இளைஞர்களே அலர்ட்! புதுச்சேரியில் அக்னிவீர் ராணுவ முகாம்! இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்...
அனைத்து சிக்கல்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் ; அன்புமணி எச்சரிக்கை!
அனைத்து சிக்கல்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் ; அன்புமணி எச்சரிக்கை!
"அமைச்சரை சந்தித்தால் கூட்டணிப் பேச்சா?" - மேகதாது விவகாரத்தில் விமர்சனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் அதிரடி பதில்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
Embed widget