மேலும் அறிய

ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தவர்கள் 84% பேர் - Local Circle ஆய்வில் தகவல்

84 சதவீத மக்கள் ஊரடங்கை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளதாக லோக்கல் சர்க்கிள் அமைப்பு எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசதிய பொருட்களான காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் இயங்கி வருகிறது. இந்த சூழலில், லோக்கல் சர்க்ள் எனப்படும் அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் ஊரடங்கை தொடர வேண்டுமா?அல்லது  ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமா? என்று மக்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் மக்களிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 62 சதவீத ஆண்களிடமும், 38 சதவீத பெண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வரும் நிலையில், 54 சதவீத மக்கள் தமிழக அரசு ஊரடங்கை வரும் மே மாதம் 31-ஆம் தேதி வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடனே நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்கள் அனைத்து தமிழக அரசு அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களை இயங்க அனுமதித்து, வீட்டிற்கே பொருட்களை வந்து கொடுத்து செல்லும் முறையுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி  வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 11 சதவீத மக்கள் மட்டும் தமிழக அரசு ஊரடங்கை மே 15-ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை வழக்கம்போல இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவீத மக்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆய்வின் இறுதியில், தமிழகத்தில் 84 சதவீத மக்கள் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மின்னணு வணிக நிறுவனங்களையும், ஹோம் டெலிவரி செய்யும் பலசரக்கு கடைகளையும் நாள் முழுவதும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின்போது மக்கள் ஊரடங்கு காரணமாக மிகவும் அவதிப்பட்டனர்.அப்போது, வீட்டிற்கே வந்து பொருட்களை அளிக்கும் ஹோம் டெலிவரி முறை மிகவும் உதவிகரமாக இருந்தது. இதனால், தற்போதைய இரண்டாம் அலையிலும் பெரும்பாலான குடும்பங்கள் அருகில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு தொலைபேசி மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை கூறி, அதனை ஹோம் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.

இவர்களில் 48 சதவீத மக்கள் பலசரக்கு மற்றும் மருந்துகளை ஹோம் டெலிவரி மூலம் பெறுகின்றனர். 26 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி மூலம் அனைத்து பொருட்களையும் பெறுகிறோம் என்று கூறியுள்ளனர். 10 சதவீத மக்கள் எதுவும் கூறவில்லை. மொத்தமாக 74 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி முறை இந்த ஊரடங்கு தொடங்கியது முதல் ஹோம் டெலிவரியால் பயனடைந்ததாக கூறியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget