மேலும் அறிய

தருமபுரியில் பரபரப்பு! ரயிலும் வருது.. பாறையும் உருண்டது.. தடம் புரண்ட பெட்டிகள்.!

 கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில் சேலம்-தருமபுரி இடையே அதிகாலை தண்டவாளத்தின் அருகே இருந்த கற்களில் உரசி தடம் புரண்டது

கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கோயம்புத்தூர் சேலம் தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கண்ணூர் விரைவு வண்டி மாலை 6 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு,  அதிகாலை 3.30 மணிக்கு தருமபுரி ரயில் நிலையத்திற்கு வரும். 

இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி வரும் வழியில் 45 கிலோ மீட்டரில் வே.முத்தம்பட்டி வனப்பகுதியில்  வனப்பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் பாதுகாப்பு சுவரில் கற்கள் சரிந்து கிடந்துள்ளது. இந்தக் கற்களில் ரயில் இன்ஜின் உரசியதில் எஞ்சின் மற்றும் அடுத்த இரண்டு பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. மேலும் வனப் பகுதி என்பதால், இந்த பகுதிகளில் வரும் ரயில்கள் மெதுவாகவே வருவதால், இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தடம் புரண்டதால், 2348 பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.  தற்போது  சுமார் 4 மணி நேரமாக பயணிகளுடன் ரயில் வனப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சேலம் மார்க்கத்தில் வேறு இன்ஜின் வரவழைக்கப்பட்டு, பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் பேருந்து மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


தருமபுரியில் பரபரப்பு! ரயிலும் வருது.. பாறையும் உருண்டது.. தடம் புரண்ட பெட்டிகள்.!

மேலும் தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது சேலம் பெங்களூர் மார்க்கத்தில் சுமார் 4 மணி நேரமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையால் இந்த கற்கள் சரிந்து விழுந்துள்ளது குறித்து ரயில்வே காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தருமபுரி அருகே தடம்புரண்ட ரயிலின் 7 பெட்டிகள் வேறு இன்ஜின் மூலம் சேலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இன்ஜின் மற்றும் 4 பெட்டிள் தருமபுரி அனுப்பட்டுள்ளது. மேலும் தடம் புரண்டுள்ள 6 பெட்டிகள் உள்ளிட்ட 9 பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயிலில் திருப்பத்தூர் வழியாக பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக தொப்பூரில் 15 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் 5 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இதனை மீட்பதற்காக பெங்களூரிலிருந்து ரயில் மீட்பு பணிகள் குழுவினர் வரவுள்ளனர். மேலும் தற்போது வரை சேலம்-பெங்களூர் மார்கத்தில் செல்லும் இன்டர்சிட்டி, பெங்களூர் பேசன்ஜர் உள்ளிட்ட ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் பயணிகளின் வசதிக்காக தருமபுரி, சேலம் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget