மேலும் அறிய

ஷாக்! 43 லட்சம் செக் பவுன்ஸ் வழக்குகள்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை லட்சமா?

நாடு முழுவதும் 43 லட்சம் காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் தமிழ்நாடு 9வது இடத்தில் உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய தூணாக இருப்பது வங்கிகள் ஆகும். வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அதிகளவு சந்திக்கும் இடர்பாடுகளாக இருப்பது செக் எனப்படும் காசோலை மோசடி ஆகும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பணம் தர வேண்டிய நிறுவனங்கள், நபர்கள் அளிக்கும் பணத்திற்கான காசோலையை வங்கிகளுக்கு எடுத்துச் சென்று பணம் கேட்கும்போது, அந்த காசோலையில் குறிப்பிட்டுள்ள பணம் இல்லாததையே செக் பவுன்ஸ் ஆகிவிட்டது என்று குறிப்பிடுவார்கள். இதனால் பாதிக்கப்படும் நபர்கள் நீதிமன்றங்களை நாடுவார்கள்.

காசோலை மோசடி வழக்குகள்:

டெல்லியில் சமீீபத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் எழுத்து வடிவில் பதில் ஒன்று அளித்தார். அதில், நாட்டில் மொத்தம் நிலுவையில் உள்ள வங்கிக் காசோலை மோசடி குறித்த விவரங்களை அளித்திருந்தார். நாடு முழுவதும் மொத்தம் 43 லட்சத்து 5 ஆயிரத்து 932 காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன்படி, நாட்டிலே அதிகளவு செக் பவுன்ஸ் (காசோலை மோசடி) நடக்கும் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது. 

தமிழ்நாட்டில் இத்தனை லட்சம் வழக்குகளா?

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் இதுவரை காசோலை மோசடி வழக்குகள் 6 லட்சத்து 41 ஆயிரத்து 898 வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இரண்டாவது இடத்தில், மகாராஷ்ட்ரா மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 89 ஆயிரத்து 836 வழக்குகள் உள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் செக் பவுன்ஸ் வழக்குகள் 1 லட்சத்து 51 ஆயிரத்து 932 உள்ளது.

காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள்:

1. ராஜஸ்தான் - 6 லட்சத்து 41 ஆயிரத்து 898 
2. மகாராஷ்ட்ரா - 5 லட்சத்து 89 ஆயிரத்து 836 
3.குஜராத் - 4 லட்சத்து 73 ஆயிரத்து 236 
4. டெல்லி - 4 லட்சத்து 54 ஆயிரத்து 653 
5.உத்தரபிரதேசம் - 3 லட்சத்து 76 ஆயிரத்து 298 
6. மே.வங்காளம் - 2 லட்சத்து 86 ஆயிரத்து 191
7. ஹரியானா - 2 லட்சத்து 40 ஆயிரத்து 843 
8. மத்திய பிரதேசம் - 1 லட்சத்து 92 ஆயிரத்து 120
9.தமிழ்நாடு - 1 லட்சத்து 51 ஆயிரத்து 932 
10. பஞ்சாப் - 1 லட்சத்து 50 ஆயிரத்து 357

இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்று வங்கி காசோலை மோசடி நடக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!
திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் சிறப்பு eKYC முகாம்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வீடியோ

PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget