மேலும் அறிய

அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்

கலசப்பாக்கம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து ஆந்திராவை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆகும். அண்ணாமலையார் கோயிலுக்கு வெளிநாடு ,வெளிமாநிலம், வெளியூர் என அனைத்து பகுதிகளிலும் பௌர்ணமி நாட்களில் லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றுவதற்கு வருகை புரிகின்றனர்.தற்போது அதிக அளவில் ஆந்திரா, தெலுங்கனா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் ஆந்திரா மாநிலம் திருப்பதி சீனிவாசாபுரத்தை சேர்ந்த நாராயணா வயது (45) இவருடைய மனைவி ருசிங்கம்மாள் வயது (42), சுஜாதா வயது (28), ஜோதி வயது (35), வரலட்சுமி வயது  (55),கோபால் வயது (35), இவருடைய மனைவி பிரவிளிகா வயது ( 34),நிர்மலா  வயது (40) , இவரது மகள் லலிதா வயது (19) , தவிட்டி நாயுடு வயது (38), இவரது மகன் ஜெகன்மோகன் வயது (17) என 11 நபர்கள் காரில் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர். காரை திருப்பதி சீனுவாசபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் சாயிக்நயக்ரசூல் வயது (25) என்பவர் ஓடிவந்தார். இவர்கள் அனைவரும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் சுற்றி வந்தபிறகு, அதிகாலையில் 5 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். 

கார் புளியமரத்தில் மோதி 2 பேர் பாலி 

கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை கிராமம் அருகே கார் சென்றபோது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்து மீது கார் லேசாக உரசியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் முழுவதுமாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர் சாயிக்நயக்ரசூல் மற்றும் 11 நபர்களும் படுகாயம் அடைந்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த ஜெகன் மோகன் , பிரவிளிகா ஆகிய இரண்டு நபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சக வாகன ஓட்டிகள் மற்ற அனைவரும் மீட்டு 108 அம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழித்து சென்றனர். இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பக்தர்கள் கோரிக்கை 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலை தற்போதுவரையில் புதியதாக அமைக்கவில்லை,வேலூர் செல்லும் வழியில் சாலையின் நடுவில் குழிகள் உள்ளது. பல்வேறு இடங்கள் வேகத்தடைகள் இல்லை, வளைவுகள் அதிகம் உள்ளபகுதில் பதாகைகளை வைக்கப்படவில்லை, தற்போது வேலூர் பகுதில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் போக்குவரத்து உள்ளது, இதற்க்கு ஏற்றவாறு சிலைவிரிவாக்கம் செய்யப்படவில்லை, இதனால் வேலூர் திருவண்ணாமலை சாலையில் பௌர்ணமி நாட்களில் அதிக வாகனம் திருவண்ணாமலைக்கு வருவதால் ஒவ்வொரு மாதமும் விபத்துகள் ஏற்படுகின்றது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ வ வேலு சொந்த மாவட்டத்திலே இவ்வாறு விபத்துகள் நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சர் உடனடியாக நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Embed widget