மேலும் அறிய

உலக தண்ணீர் தினம்: பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை கொண்டு சொட்டு நீர் பாசனம் - அசத்தும் தருமபுரி விவசாயிகள்

ஒரு செடிக்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி வந்த நிலையில், இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு குடம் தண்ணீரில், 10 கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற முடிகிறது

தருமபுரி மாவட்டத்தில் சிறியதும், பெரியதுமாக 8 அணைகள் உள்ளன. இருந்தபோதும் மாவட்டத்தின் பெரும்பகுதி விளைநிலங்கள் கோடைகாலத்தில் பாலைவனத்துக்கு நிகராக வறட்சியை வெளிக்காட்டத் தொடங்கிவிடும். இவ்வாறான நிலங்களில் பருவ மழைக்காலங்களில் குறுகிய கால பயிர்களை மட்டுமே சாகுபடி செய்ய முடியும். இந்த மாதிரியான சாகுபடி முயற்சிகளும் கூட பயிர்களில் ஏற்படும் நோய்த் தாக்குதல், விவசாய பணிகளுக்கான ஆள் பற்றாக்குறை, பயிர்களுக்கு குரங்கு, மயில், காட்டுப்பன்றி, யானை போன்ற வன விலங்குகளால் ஏற்படும் சேதம் போன்ற சவால்களால் விவசாயிகளுக்கு நஷ்டத்தையே பரிசளித்து வருகிறது. எனவே, விவசாயிகளில் பலரும் மரப்பயிர் விவசாயத்துக்கு படிப்படியாக மாறி வருகின்றனர். இந்த மரப்பயிர்களுக்கு தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து ஊற்றுகின்றனர். 

உலக தண்ணீர் தினம்: பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை கொண்டு சொட்டு நீர் பாசனம் - அசத்தும் தருமபுரி விவசாயிகள்
 
இதில் கிராமங்களில் உள்ளவர்கள் ஆழ்துளை கிணறுகள், குடிநீர் குழாய்களில், 24 மணி நேரமும், நினைக்கும் நேரத்திலும் தணாணீர் எடுத்து வருகின்றனர். ஆனால் மலைகளை ஒட்டியும், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாயிகள் கிணற்றை நம்பியே இருந்து வருகின்றனர். ஆனாலும், கோடை காலங்களில் வறட்சி தன் கோர முகத்தை காட்டும் போது, இந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மரப்பயிர்களை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை ஆளாக்கி விடுவதும் சிரமமாக அமைந்து விடுகிறது. 

உலக தண்ணீர் தினம்: பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை கொண்டு சொட்டு நீர் பாசனம் - அசத்தும் தருமபுரி விவசாயிகள்
 
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடும் வறட்சிக்கு இலக்காகும் பென்னாகரம் வட்டத்தில் உள்ள சில விவசாய கிராமங்களில் 35 விவசாயிகளை தேர்வு செய்து ‘மேனுவல்’ முறையில் குறைந்த நீரில் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் ஏற்படுத்தி பயிர்களை காக்கும் பயிற்சியை தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கியது. நபார்டு வங்கி மூலம் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் திசையெங்கும் வீசிச் செல்லப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பழைய மண் சட்டிகள் போன்றவற்றின் அடிப்பகுதியில் சிறிய துவாரமிட்டு, அதன் வழியே துணியால் ஆன திரியை செலுத்தி விட வேண்டும். பாட்டிலின் வெளியே சிறிதளவு திரி நீட்டியிருக்கும்படி அமைத்த பின்னர் அவற்றில் தண்ணீரை நிரப்பி செடிகளின் அருகே வைத்து விட்டால், சுமார் 2 மணி நேரத்துக்கு துளித்துளியாய் அந்த தண்ணீர் செடிகளின் வேரைச் சுற்றி ஈரத்தை பரப்புகிறது.இந்த பயிற்சி பெற்றவர்களில் வட்டுவன அள்ளி, பெரிய தும்கல், சின்ன தும்கல் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் இந்நுட்பத்தை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர்.

உலக தண்ணீர் தினம்: பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை கொண்டு சொட்டு நீர் பாசனம் - அசத்தும் தருமபுரி விவசாயிகள்
 
இதில் மா, கொய்யா, நெல்லி, நாவல் உள்ளிட்ட கனிகள் தரும் மரக்கன்றுகள், மர சாமான்களுக்கு பயன்படும் மரக்கன்றுகள் ஆகியவற்றை நட்டு பராமரித்து வருகின்றனர். குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அவற்றை பராமரித்து வளர்த்து விட்டால் பின்னர் அவை மானாவாரி நிலையை அடைந்து விடும். அதுவரை, ஒவ்வொரு ஆண்டின் கோடை காலமும் அந்த மரக் கன்றுகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அதனால் தண்ணீர் கிணற்றிலிருந்து குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றியுள்ளனர். தற்போது நபார்டு வங்கியின் நீர் மேலாண்மை திட்டத்தின் பயிற்சியின்படி, பிளாஸ்டிக்  குடிநீர் பாட்டில்கள், பானைகள் மூலமான இந்த  ‘மேனுவல்’ சொட்டுநீர் பாசன நுட்பம் அமைந்துள்ளது.
 

உலக தண்ணீர் தினம்: பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை கொண்டு சொட்டு நீர் பாசனம் - அசத்தும் தருமபுரி விவசாயிகள்
 
இதில் குறைந்த நீரைக் கொண்டு செடிகளின் வேரைச் சுற்றி ஏற்படுத்தப்படும்  ஈரம், கூடுதல் நாட்கள் வரை உலர்ந்து விடாமல் இருக்க வேரைச் சுற்றி காய்ந்த சருகுகளைக் கொண்டு மூடாக்கு ஏற்படுத்தி உள்ளனர். ஒரு செடிக்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி வந்த நிலையில், இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு குடம் தண்ணீரில், 10 கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற முடிகிறது. மேலும் 5 லிட்டர் தண்ணீர் உள்ள மண் பானையில் வைத்தால், சுமார் 3 நாட்களுக்கு ஈரப்பதம் உள்ளது. இந்த முறையால் குறைந்த தண்ணீர், குறைந்த ஆள் தேவை, குறைந்த நேரம் ஆகியவற்றை கொண்டு செடிகளை பராமரிக்க முடிகிறது. இந்த முறை எல்லோரும் பின்பற்றினால், தண்ணீர் வீணாகாமல்,சிக்கனமாக பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதையும் தடுக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget