மேலும் அறிய

Watch Video: அரசு பேருந்து மீது கல்வீச்சு, சேலம் ஆத்தூரில் பாமகவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..

அரசு பேருந்து  முன் பக்க கண்ணாடி  முழுவதும் உடைந்து சேதமானது. இந்நிலையில், பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடி உடைத்த இருவரை ஆத்தூர் நகர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

வன்னிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

Thirumavalavan on Reservation: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து: ‛தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை வரவேற்கிறேன்’ -திருமாவளவன்!

இந்த தீர்ப்பை எதிர்த்து சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை முன்பு சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அவ்வழியாக வந்த அரசு நகர பேருந்துகளை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

 

வீடியோவில், அரசு பேருந்து  முன் பக்க கண்ணாடி  முழுவதும் உடைந்து சேதமானது. இந்நிலையில், பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடி உடைத்த இருவரை ஆத்தூர் நகர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

Vanniyar Reservation | 1989 கருணாநிதி அரசு முதல் 2021 மு.க.ஸ்டாலின் அரசு வரை... வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கடந்துவந்த பாதை..

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னிய சமுதாயத்திற்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கி சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு அளித்ததுள்ளது. இந்த உத்தரவைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், தீர்ப்பைக்   கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களிலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் பேரவை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

 

 

மேலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் இராமதாஸ், மாநில துணை தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்து, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் கூறுகையில், ”கடந்த 40 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு போராடி பெற்ற வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்திருப்பது சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க வேண்டும். மீண்டும் இட ஒதுக்கீடு உறுதி செய்யும் வகையில்  போராட்டம் தொடர்ந்து நடத்துவோம் என்றும், தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னிய சமூகத்திற்கு செய்த துரோகம்” என்று கூறினார்.

மேலும் , சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் சாலை மறியலில் வன்னியர் பேரவை மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இணைந்து நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.

10.5% உள்ஒதுக்கீடு  ரத்து செய்யும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர்  தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை; துணை மருத்துவப் படிப்புக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு
10th Revaluation Result 2024: வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?
TN Rain Alert: அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
அடுத்த 7 நாட்களில் தமிழ்நாட்டில் வெளுக்கும்.. நீலகிரி, கோவையில் கனமழை..
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Embed widget