மேலும் அறிய

35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை.. துரத்திய இதய நோய்.. காலமானார் வீரப்பனின் மூத்த சகோதரர்!

கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன், சத்திய மங்கலம் கொலை வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் நெஞ்சு வலி காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் (75). இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு சத்திய மங்கலத்தில் வனத்துறை அதிகாரி ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன், சத்திய மங்கலம் கொலை வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சேலம் மத்திய சிறைக்கும், இங்கிருந்து மீண்டும் கோவை சிறைக்கும் மாற்றப்பட்டார்.

35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை.. துரத்திய இதய நோய்..  காலமானார் வீரப்பனின் மூத்த சகோதரர்!

கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப் பட்டிருந்தார். அவர், இருதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். தனது 40 வயதில் சிறைக்குச் சென்று ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவரை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பி வந்தார்.

இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மாதையன் அவ்வப்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவருக்கு அவ்வப் போது சிறை அதிகாரிகள் பரோல் வழங்குவர். கடந்த மாதத்தில் 15 நாட்களுக்கு பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை.. துரத்திய இதய நோய்..  காலமானார் வீரப்பனின் மூத்த சகோதரர்!

நேற்று முன்தினம் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் நெஞ்சு வலி காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் இன்று (25.05.2022) காலை 5:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக சிறையிலிருந்து மாதையனை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்து வந்த நிலையில் மாதையன் உயிரிழந்த சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமன்றி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:  சஜித் பிரேமதாச வாக்களித்தார்
Breaking News LIVE: சஜித் பிரேமதாச வாக்களித்தார்
Shocking Video: மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:  சஜித் பிரேமதாச வாக்களித்தார்
Breaking News LIVE: சஜித் பிரேமதாச வாக்களித்தார்
Shocking Video: மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
TN Rains: சென்னையில் விடிய, விடிய மழை! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களில் வெளுக்கப்போகுதா?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
தமிழகத்தில் இன்று ( 21.09.24 ) மின்தடை ஏற்படும் பகுதிகள் என்னென்ன? எப்போது?
Nalla Neram Today Sep 21: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 21:சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Udhayanidhi - Rajini : ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
Embed widget