மேலும் அறிய

உண்மையாக சமூகநீதி வாரம் கொண்டாட பாஜகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தீண்டாமைக் கொடுமையின் உச்சமாக வேங்கைவயல் சம்பவம் நிகழ்ந்தது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு காரணமானவர்களை இதுவரை கைது செய்ய முடியவில்லை.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுதிர் முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, அலுவலகத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக இருந்தபோது, இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு அலுவலகம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 15 மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது.

உண்மையாக சமூகநீதி வாரம் கொண்டாட பாஜகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது  - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி எண்ணற்ற பல  திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டங்கள் மக்களைச் சென்று சேர்ந்துள்ளன. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாரதிய ஜனதா கட்சியை நாடி வந்து கொண்டுள்ளனர். உலகத் தலைவராக பிற நாடுகளால் மதிக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி, ஏழை எளிய வாழ்வாதாரம் மேம்பட தொடர்ந்து உழைத்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமூகநீதி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. உண்மையாக சமூகநீதி வாரம் கொண்டாட பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. திமுக சமூகநீதிக்காக செய்வது போல பெரிதாக பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது ஒன்று செயலில் ஒன்று என்பது போல நடந்து கொள்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் ஒரு கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் சென்றதற்கு திமுக நிர்வாகி சொல்ல முடியாத வார்த்தைகளால் ஏசினார். இதுதான் திமுகவின் உண்மையான நிலை. மேலும், தீண்டாமைக் கொடுமையின் உச்சமாக வேங்கைவயல் சம்பவம் நிகழ்ந்தது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு காரணமானவர்களை இதுவரை கைது செய்ய முடியவில்லை.

 உண்மையாக சமூகநீதி வாரம் கொண்டாட பாஜகவுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது  - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

சமூக நீதிக்காக பிரதமர் மோடி எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிற்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரத்தை பிரதமர்தான் கொடுத்தார். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கான வளர்ச்சியை முன்னெடுத்து பிரதமர் தொடர்ந்து உழைத்து வருகிறார். காசிக்கும் ராமேஸ்வரத்திற்குமான இணைப்பை மீண்டும் ஏற்படுத்தி தமிழக மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய பிரதமர், தற்போது செளராஷ்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம், செளராஷ்டிர மக்கள் சொந்த மண்ணிற்கு செல்லும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளார். தமிழுக்கு பெருமை சேர்க்கும் தலைவராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் திருக்குறளை 16 மொழிகளில் மொழி பெயர்த்த பிரதமர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை ஒன்றையும் உருவாக்கியுள்ளார். தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நாடு 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது அனைத்து வளர்ச்சிகளும் கொண்டதாக மாற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பிரதமர் உழைத்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget