மேலும் அறிய

6 மாதங்களுக்கு பிறகு ஒக்கேனேக்கல்லில் சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி-அதிக கட்டுப்பாடுகளால் ஏமாற்றம்

’’ஒகேனக்கல்லில் பரிசல் சென்று அருவியின் அழகை கண்டு ரசிக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும், அருவிகளில் குளிப்பதற்கும், ஆயில் மசாஜ் செய்வதற்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு’’

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி-அதிகளவு கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம். 
 
 
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வெளிநாடு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் சுற்றுலா தலங்கள் திறக்க தமிழக அரசு தளர்வுகளை வழங்கி வந்தது. இந்நிலையில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு மட்டம் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.

6 மாதங்களுக்கு பிறகு ஒக்கேனேக்கல்லில் சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி-அதிக கட்டுப்பாடுகளால் ஏமாற்றம்
 
இந்நிலையில் இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது. மேலும் சுற்றுலா தளத்திற்கு வருபவர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். மேலும் ஒகேனக்கல்லில் பரிசல் சென்று அருவியின் அழகை கண்டு ரசிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் குளிப்பதற்கும், ஆயில் மசாஜ் செய்வதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டது.

6 மாதங்களுக்கு பிறகு ஒக்கேனேக்கல்லில் சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி-அதிக கட்டுப்பாடுகளால் ஏமாற்றம்
 
 இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் ஒகேனக்கல் வர தொடங்கியுள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகையால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் கலைக்கட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும் ஆயில் மசாஜ் செய்வதற்கும் அனுமதி இல்லாததாலும், தொடர்ந்து பரிசலில் சென்று பொம்மச்சிக்கல், ஐந்தருவி, மணல்திட்டு, கர்நாடக எல்லை போன்ற பகுதிகளுக்கு அனுமதி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
 
மேலும் பரிசல் துறையில் இருந்து மாமரத்துக்கடவு வரைக்கும் பரிசல் பயணம் செல்வதால், பரிசல் பயணம் கூட திருப்தி அளிக்கவில்லை. இதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்காமல் இருந்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் அருவிகளில் குளிக்கவும், ஆயில் மசாஜ் செய்து கொள்ளவும் அனுமதி இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைக்கும். இதுபோன்று கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருக்கும். இதனால் தொழிலாளர்களுக்கு போதிய வருவாய் இருக்காது என சுற்றுலா தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget