மேலும் அறிய

கல்வி கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் அனுமதி மறுப்பு - சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மாணவி புகார்

’’ஏற்கனவே காக்காபாளையம் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த விவசாயி மோகன் என்பவரின் மகள் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால், இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவியை பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெளியே அனுப்பி விட்டதாக கூறி, பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி சீருடையுடன் பெற்றோரை அழைத்து வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

கல்வி கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் அனுமதி மறுப்பு -  சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மாணவி புகார்

சில நாட்களுக்கு முன்பு பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி, அடித்து அவமானப்படுத்தி வெளியே நிறுத்தியதால் தகவலறிந்து மாணவியின் பெற்றோர் நேரில் சென்று கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே காக்காபாளையம் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றியதாக மாணவி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். 

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வார வேலை நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை வகுப்புகள் நடத்துவதாகவும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடுதல் நேரத்தில் வகுப்புகளை நடத்துவதாகவும் கூறும் மாணவியின் தந்தை மோகன், இதற்காக பள்ளியில் இருந்து வழங்கப்பட்ட ஒப்புதல் கடிதத்தில் பெற்றோர் கையெழுத்திட வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதாகவும், இதனால் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி கையெழுத்திட மறுத்ததாகவும் கூறுகிறார். இதன் காரணமாகவே பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மகளை பள்ளியில் இருந்து பள்ளியில் இருந்து வெளியேறியதாகவும் மாணவியின் தந்தை மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கல்வி கட்டணம் செலுத்தாததால் பள்ளியில் அனுமதி மறுப்பு -  சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மாணவி புகார்

இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்கள் பள்ளியில் சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் அவரது சகோதரர் என இரண்டு பேர் படிப்பதாகவும், இதுவரை அவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த சொல்லி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பாக புகார் அளிக்கப்பட்டு சமரச பேச்சு வார்த்தைக்கும் மாணவியின் பெற்றோர் வந்ததாகவும், ஆனால் அதன்பின் பெற்றோர் தரப்பிலிருந்து எந்தவித தகவலும் இல்லை என்று கூறினர். மேலும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது இடத்தில் படித்து வந்த மாணவி உறவினர் ஒருவரோடு வந்ததாகவும், பெற்றோரை அழைத்து வரும்படி கூறி அனுப்பினோம் ஆனால் அவர் மீண்டும் பள்ளிக்கு வராமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார் என்றும் விளக்கமளித்தனர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
Embed widget