மேலும் அறிய

ஜார்க்கண்ட்டில் உயிரிழந்த தருமபுரியை சேர்ந்த ராணுவவீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்...!

’’தமிழக அரசு உயிரிழந்த சங்கரின் மனைவிக்கு, அரசு பணி வழங்க வேண்டும் என குடும்பத்தினரும், கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்’’

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி ஈபி காலனியை சேர்ந்த சந்திரன் மகன் சங்கர், படிக்கும் பருவத்தில் இருந்தே நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். சங்கர் தனது விருப்பப்படியே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லை பாதுகாப்பு படையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பயிற்சி முடிந்து, பல்வேறு மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.
 
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். சங்கருக்கு திருமணமாகி மனைவி கலா, மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பணியாற்றி வரும் முகாமில், காலை உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் முகாமிலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மாரண்டஹள்ளியில் உள்ள சங்கரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 

ஜார்க்கண்ட்டில் உயிரிழந்த தருமபுரியை சேர்ந்த ராணுவவீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்...!
 
இதனை அடுத்து ஜார்க்கண்டில் மாரடைப்பால் உயிரிழந்த சங்கரின் உடல், விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊரான மாரண்டஹள்ளிக்கு  கொண்டு வரப்பட்டது. ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சங்கரின் உடலை கண்டு, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமமே கதறி அழுதது.
 
இதனை சங்கரின் உடல்  பொதுமக்கள் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டது. தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி உயிரிழந்த சங்கரின் உடலுக்கு, தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மாரண்டஹள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து உயிரிழந்த சங்கரின் மனைவி மற்றும்  குழந்தைகளுக்கும் அரசு சார்பில் ஆறுதல் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட்டில் உயிரிழந்த தருமபுரியை சேர்ந்த ராணுவவீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்...!
 
இதனையடுத்து சங்கரின் உடல் ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்பொழுது அவர்களது குல வழக்கப்படி, சொந்த ஊரில் உள்ள மயானத்தில்  ராணுவ மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் பணியின்போது உயிரிழந்த சங்கரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆதரவில்லாத நிலை இருப்பதால், தமிழக அரசு உயிரிழந்த சங்கரின் மனைவிக்கு, அரசு பணி வழங்க வேண்டும் என குடும்பத்தினரும், கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியின் போது உயிரிழந்த சங்கரின் இறப்பு கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Embed widget